rtyytகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் தனியார் சொகுசு பஸ் சாரதி உட்பட ஆறுபேர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் ஒன்று கடைத் தொகுதியையும், மின்சார கம்பங்களையும் உடைத்துக்கொண்டு கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறைக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 3.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் சாரதி உட்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.  இவ் விபத்து அதிவேகத்தினாலோ, அல்லது சாரதி துங்கியதனாலோ இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிசார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை யாழ் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள ரயில் கடவையில் இன்றுபிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது. ரயில் கடவையைக் கடக்க முயன்ற காரை ரயில் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் பலத்த சேதமடைந்துள்ளதோடு, எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென கூறப்படுகிறது.

rtryttr