Header image alt text

rohana hettiyarachchiஅரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். Read more

sdsமக்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் படிவங்களை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. Read more

electronic Identity cardபுதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. 2ம் கட்டமாக ஏற்கனவே தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளவர்களுக்கு புதிதாக இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

gfhf“எங்களிடம், இனவாதமோ, மதவாதமோ இருக்கக்கூடாது. அதற்கு அப்பால் எங்களிடம் மனித நேயம் இருக்க வேண்டும். அதுதான் சரியான நல்லுறவை ஏற்படுத்தும். இனவாதத்தையும் மதவாதத்தையும் இந்த நாட்டிலே அரசியல் செய்வதற்கு வளர்ப்போமானால், இந்த நாட்டை ஆக்கபூர்வமான நாடாகக் கட்டியெழுப்ப முடியாது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். Read more

newzealandநியுசிலாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொள்ளும் இலங்கையர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் குடிவரவுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

2016ம் ஆண்டு 23பேரும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 21பேரும் இலங்கையில் இருந்து சென்று அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 5க்கும் குறைவானவர்களின் விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு நியுசிலாந்தில் அதிக அகதி அந்தஸ்த்தைப் பெற்றுக் கொண்டவர்கள் சீனர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

sdfsdfsdவவுனியா தாண்டிகுளம் தொடருந்துக் கடவையை பாதுகாப்பான தொடருந்துக் கடவை ஆக்கக் கோரியும் நேற்றுமாலை குறித்த கடவையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை கண்டித்தும் இன்றுகாலை தொடருந்தை மறித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து காலை 8.20 மணிக்கு தாண்டிக்குளம் கடவையில் சிவப்பு கொடி காண்பித்து மறிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டையடுத்து 10 நிமிடங்களின் பின் தொடருந்து பயணத்தைத் தொடர போராட்டக்காரர்கள் அனுமதித்துள்ளனர். 

shranthiமுன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களுடைய புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷ ஆகிய இருவரும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு, இன்று அழைக்கப்பட்டுள்ளனர். Read more

saddsaஉலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏ-380 விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளது.

குறித்த விமானத்தில் கண்காணிப்பு செயற்பாடுகள் ஏனைய பயணிகள் விமான சேவைகளுக்கு ஒத்தாற் போல முன்னெடுக்கபடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் நவீன விமானங்கள் தரையிறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

sdffsf2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தில் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சிறார்களான மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களால் மலர்கள் வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செஞ்சோலை வளாகத்தில் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.

dsdபயணிகள் போக்குவரத்து பஸ்கள் தனியான வழித்தடத்தில் பயணிப்பதற்கான நடைமுறை நாளை முதல் கொழும்பில் அமுல்படுத்தப்படவுள்ளது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த நடைமுறையை பின்பற்றவுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனூடாக பொது போக்குவரத்து துறை மேலும் வலுப்படுத்தப்படும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். காலை 6 மணி தொடக்கம் 9 மணி வரையான காலப்பகுதியில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். Read more