Header image alt text

UN human right commssionபுலிகளை சார்ந்தோருக்கு எதிராகவும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் இடம்பெறும் பட்சத்தில், அந்த விசாரணைகள் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் சர்வதேச வலையமைப்பு என்பவைத் தொடர்பிலும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. Read more

dfsபுத்தளம் – சிலாபம் வீதியில், ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 18பேர் காயமடைந்ததுடன், சிலாப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

salaryமட்டக்களப்பு வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்களின் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாத சம்பளம் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான நிலுவைச்சம்பளம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. நிலுவைச்சம்பளம் கிடைக்காமைக்கு எதிராக தொழிலாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. Read more

sri lanka podujana peramunaசிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவரும் சிறீலங்கா பொதுஜன முன்னணிக்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.டீ வீரசிங்க, டீ.எம்.ஜயசேன, சந்ரா தெவரப்பெரும ஆகியோரே இவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ளனர். Read more

vaikoஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூட்டத்தின்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவை (வை.கோபால்சாமி) இலங்கையர்கள் சிலர் தாக்க முற்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சிக்கப்பட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களால் இந்த முற்றுகை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

kurdsஈராக்கிலிருந்து குர்திஸ்தான் பிரிந்து செல்வதை ஆதரித்து 92 வீதமானோர் வாக்களித்துள்ளனர். குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் 72.61 வீதமானவர்கள் கலந்துகொண்டு, வாக்களித்துள்ளனர்.

குர்திஸ்தான் பிரிவிற்கு 2,861,000 பேர் ஆதரவாகவும் 224,000 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இந்த வாக்கெடுப்பானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக்கின் வட பகுதியில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். Read more

rohinja muslimsமியான்மாரிலிருந்து இங்கு வருகைதந்துள்ள றோகிஞ்சா அகதிகளை நாடுகடத்துமாறும், நாட்டின் இறைமையைப் பாதுகாக்குமாறும் கோரி, கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் காரியாலயத்தில் மகஜர் ஒன்று நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

சிங்கலே தேசிய சக்தி உள்ளிட்ட அமைப்புகள் பல இணைந்தே, இந்த மகஜரைக் கையளித்துள்ளனர். அந்தக் காரியாலயத்துக்கு முன்பாக காத்திருந்த பிரிவினர், அலுவலக அதிகாரியொருவரிடம் மகஜரை கையளித்ததன் பின்னர், அமைதியான முறையில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். Read more

faiser mustafaதேர்தல் நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருடன் முக்கிய சந்திப்பு ஒன்றை நடத்தியதாக உள்ளுராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது. இதன்போது தேர்தல் நடத்தும் போது தமது அமைச்சு செய்ய வேண்டியக கருமங்கள் தொடர்பிலும், தேர்தல் ஆணைக்குழு மற்றும் அரசியல் கட்சிகளின் கடமைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு மிகவும் வினைத்திறனாக அமைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Read more

vidya caseபுங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் சுவிஸ்குமார் என அறியப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி முதலாவது மற்றும் ஏழாவது சந்தேகநபர்கள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய நீதாய விளக்க மன்றால் இன்றுமுற்பகல் இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம் மற்றும் 9ஆம் எதிரிகளுக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

02 ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயகுமார்
03 ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார்
04 ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன்
05 ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன்
06 அம் இலக்க எதிரியான பெரியாம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன்
08 ஆம் எதிரி ஜெயநாதன் கோகிலன்
09 ஆம் எதிரியான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more

IMG_9316புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து யாழ். திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத்திற்கு நேற்று ஒலிபெருக்கி சாதனங்களை வழங்கிவைத்துள்ளார்.

நல்லூர் பிரதேச சபையில் பிரதேச சபையின் செயலாளர் திரு. சு.சுதர்ஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினரால் திருநெல்வேலி வாலையம்மன் சனசமூக நிலையத் தலைவர் டொக்டர் சி.பத்மராஜன் அவர்களிடம் மேற்படி ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கப்பட்டன. Read more