Header image alt text

rohinja muslimsகல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் 31பேரும் பூஸா தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் பாதுகாப்பு கருதி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்த கல்கிஸ்ஸை பிரதேசத்தில் உள்ள வீட்டை பௌத்த பிக்குகள் நேற்று சுற்றிவளைத்ததை அடுத்து அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் குடியேறிகளுக்கான அமைப்பின் பராமரிப்பில் கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள இரண்டு அடுக்கு வீடொன்றில் பெண்கள், குழந்தைகள் உட்பட 31 ரோஹிஞ்சா அகதிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். Read more

exam resultsஇந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வெளியாகவுள்ளன. இதேவேளை, 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகளை மார்ச் 28ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

land slideதற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற மழைவீழ்ச்சி எதிர்வரும் தினங்களுக்கும் இதேபோன்று தொடருமானால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு குறித்த பிரதேச மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

ffffffffffயாழ். நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் இரு பாடசாலைகளுக்கும், யாழ். மாவட்ட கைப்பணி அபிவிருத்தி சங்கத்திற்கும் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒரு தொகுதி உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. Read more

charlesசுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் ரஜரட்டை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை மேற்கொண்டவராவார். Read more

provincial councialசப்ரகமுவ, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளன. இதற்கமைய, சப்ரகமுவ மாகாண சபை இன்று நள்ளிரவுடன் கலைகின்றது.

மேலும், தற்போதைய நிலவரங்களின்படி, குறித்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. 2012ம் ஆண்டு ஜூலை 25ம் திகதி சப்ரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டு, அதேவருடம் செப்டம்பர் 8ம் திகதி தேர்தல் நடைபெற்றது. Read more

vidyaபுங்குடுதீவு மாணவி சி.வித்தியா கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சதித்திட்டத்தின்படி புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவை கடத்தி கூட்டு வன்புணர்வுக்குப் பின் படுகொலை செய்யப்பட்ட வழக்கினை விசாரிக்க தீர்ப்பாய நீதிமன்றம் நியமிக்கப்பட்டது. Read more

gggggggggggஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களுக்கும்,

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 24.09.2017 சுவிஸின் Schweighof strasse 296, 8055 Zurich என்னுமிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், வடமாகாணசபையில் நிலவும் பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, தெளிவான பதில்களும் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது. Read more

lalith jayasinga2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெல்மதுளை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று முற்பல் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார். Read more

kidnap caseகொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கொமடோர் டீ.கே.பி. தசநாயக்க முதற்தடவையாக நேற்று திறந்த மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆஜர்படுத்தப்பட்டிருந்தார். Read more