Header image alt text

governmentமாகாண மற்றும் உள்ளூராட்சி எல்லை நிர்ணய முறையை பல கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வருடத்துடன் பதவிக் காலம் நிறைவுபெறும் வடமத்திய சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான எல்லை நிர்ணயம் செயற்பாடுகளை முதலாவது கட்டத்தின் கீழ் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக எல்லை நிர்ணய குழுவின் தலைவர் கணகரத்னம் தவலிங்கம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இதனை நிறைவு செய்வதற்கு சபாநாயகர் ஆலோசனை வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். Read more

sdfsயாழ். காங்கேசன்துறை, மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கிணற்றை சுத்தப்படுத்தும்போது இந்தப் பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கிணற்றிலிருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. Read more

caffe30 சதவீதப் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதாக மேற்கொள்ளப்பட்ட மாகாணசபைகள் திருத்தச் சட்டத்தின் ஊடாக, பெண்கள் அமைப்பு, சிவில் அமைப்புகள் மட்டுமன்றி முழு நாடும் பாரிய ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது என, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) தெரிவித்துள்ளது. இந்தச் திருத்தச்சட்டத்தில், கூறப்படுகின்ற நோக்கமானது 30 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை,வேட்புமனுக்காக, சான்றுபகர்கின்றமையே ஆகும்.

ஆனாலும், ஏதேனும் வேட்புமனுப்பத்திரத்தில் குறித்த 30 சதவீதப் பெண்கள் தொகையானது உள்வாங்கப்படவில்லையானால், குறித்த வேட்புமனுவினை நிராகரிப்பதற்கு சட்டதிருத்தத்தில் எந்தவிதத்திலும் இடம் ஒதுக்கப்படவில்லை. அதற்கமைய, அவ்வாறான வேட்புமனுக்களை செயல் ரீதியாக நிராகரிப்பதற்கு, தெரிவத்தாட்சி அலுவலருக்கு முடியாது என, அவ்வமைப்பின் தேசிய கண்காணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
Read more

trumpஅமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடைவிதிக்கப்பட்ட சில நாடுகளுடன் தற்போது மேலும் மூன்று நாடுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிப்பதாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். Read more

lalith jayasinga2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்கவை பெல்மதுல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

image_5897dbf056மக்களின் காணிகளை விடுவித்து, அரச காணிகளில் படையினர் குடியேறவேண்டும் என மூதூர் பாட்டாளிபுரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாட்டாளிபுரத்தில், நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அங்குள்ள மக்கள் சார்பில், கிராம அபிவிருத்திச்சங்கம் இக்கோரிக்கையை விடுத்துள்ளது. Read more

ACCIDENTஇந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களின் 1789 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற விபத்துக்களில் 533 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக தேசிய வீதி போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதிகள் 588 பேர் உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்து விபத்திற்குள்ளாகியதில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். Read more

trainவடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டமையால் வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை நேற்று மாலை முதல் தடைப்பட்டது.

நேற்றிரவு 9.45 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. Read more

strikeநாடளாவிய ரீதியில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சேவையிலிருந்து இடைவிலகப்பட்டுள்ள வட மாகாணத்தின் 05 பொது சுகாதார பரிசோதகர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். Read more

mahinda chandrikaநாட்டை மீட்டெடுக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஆட்சியமைப்பது தவறில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஒருபோதும் ஆட்சியமைக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.

இன்று நாம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கின்றோம். இந்த பாதையை மீண்டும் மோசமான பக்கம் திருப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். Read more