இலங்கையில் இதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று மேற்கொள்ளப்பட்டது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை ஏற்பாடு செய்திருந்தன. வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட பல இடங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர். Read more
புலிகள் புதைத்து வைத்துள்ளதாக கூறப்படும் தங்கத்தை கண்டறிவதற்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரண்டு ஸ்கேனர் கருவிகளை எடுத்துச் சென்ற 8 பேர் வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2630 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ வெளியேறும் வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடவத்தையில் இருந்து கதிர்காமம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
ஜனாதிபதியின் மேலதிக செயலாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையினை அடுத்து தமது போராட்டத்தை நிறைவு செய்துகொள்வதாக விசேட தேவையுடைய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
மே முதலாம் தினத்தன்று புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் உள்ள விகாரை ஒன்றில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது, ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் பல வருட காலமாக நிலவி வந்த முறுகல் நிலை மற்றும் அதிகாரப்போக்கை முடிவிற்குக் கொண்டு வந்த கிம் ஜாங் உன், 1953 ஆம் ஆண்டின் பின்னர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்த முதலாவது வட கொரிய அரச தலைவராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.