Header image alt text

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதேநேரம் நாட்டின் 18 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் 11,723 குடும்பங்களை சேர்ந்த 44,745 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு பூராகவும் 26,623 குடும்பங்களை சேர்ந்த 106,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், சீரற்ற காலநிலையினால் 2199 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு, 35 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 751 ஏனைய சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

சீரற்ற வானிலையின் காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் 6,255 குடும்பங்களைச் சேர்ந்த, 24,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மக்களை தங்கவைப்பதற்காக, 81 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மஹவௌ பகுதியில் 15 முகாம்களும், தங்கொட்டுவ பகுதியில் 1 முகாமும், ஆராச்சிக்கட்டுவ பகுதியில் 9 முகாம்களும், நாத்தாண்டிய பகுதியில் 39 முகாம்களும், சிலாபத்தில் 11 முகாம்களும், வென்னப்புவ பகுதியில் 5 முகாம்களும், கற்பிட்டி பிரதேசத்தில் 01 முகாமும் அமைக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகிறது. Read more

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7இல் கல்வி கற்கும் 12 வயது மாணவிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் இன்று தெல்லிப்பளை காவற்துறையால் கைது செய்யப்பட்டார்.

குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியரான செல்வரத்தினம் சத்தியநாராணயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read more

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே பொதி சோதனையாளர்களின் பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து ரயில்வே பொதி சோதனையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். Read more

முல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கள்ளப்பாடு வடக்கு முல்லைத்தீவினை சேர்ந்த 28 வயதான வரதராஜா சதாநீசன் ஆவார்.

நேற்று மாலை முதல் மகனை காணாத குறித்த இளைஞரது தந்தை பல இடங்களிலும் தேடித் திரிந்துள்ளார். இந்நிலையில் செல்வபுரம் கள்ளுத்தவறணை பகுதியிலுள்ள பனங்கூடலுக்குள் மோட்டார் சைக்கிள் ஒன்று நெடு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த சிலர் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். Read more

தமிழ்மொழி மூல ஆசிரியர்கள் 1500 பேர் 2 வருட ஆசிரியர் பயிற்சியை நினைவு செய்து இம்மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் இணைந்து கொள்கின்றனர்.

2016, 2017 ஆம் கற்கை ஆண்டு ஆசிரியர் பயிற்சி கற்கை நெறிகளில் இணைந்து ஆசிரியர் பயிற்சியை பெற்றுக்கொண்ட இவர்கள் இரண்டு வருட பயிற்சியை நிறைவு செய்துகொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இருந்து வெளியேறுகின்றனர். இவர்களில் 322 ஆசிரியர்கள் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றவர்களாகும். Read more