Header image alt text

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய 18 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒருசில அமைச்சர்களுக்கு அவர்கள் வகித்த அமைச்சுப் பொறுப்புகளுக்கு மேலதிகமாக மற்றுமொரு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதோடு, ஒருசில புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 18 அமைச்சுப் பொறுப்புக்களைத் தவிர, ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் அதே பதவிகளை வகிப்பார்கள் என அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். Read more

வழிகாட்டல் மற்றும் உளவியல் பட்டதாரிகள் தமக்கான வேலைப்வாய்ப்பினை வழங்க கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

உளநல பட்டப்படிப்பனை முடித்துள்ள ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்காது, வேறுபாட ஆசிரியார்களுக்கு நேர்முகதேர்வு நடத்துவதற்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read more

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்ததாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார

மற்றும் கல்கிஸை பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு முன்னாள் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால ஆகியோர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25 ஆவது நினைவு தினம் இன்றாகும். சர்வதேச மே தினம் கொண்டாடப்படும் இன்று போல் ஓர் தினத்திலேயே அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் காரணமாக கொல்லப்பட்டார்.

இலங்கையின் நிறைவேற்றதிகாரம் மிக்க இரண்டாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணசிங்க பிரேமதாச, 1993 ஆம் ஆண்டு மே தின பேரணி ஒன்றை ஏற்பாடு செய்து கொண்டிருந்த போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தார். 1924 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி ரணசிங்க பிரேமதாச பிறந்தார். Read more

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் குருநாகல்-வந்துராகல பகுதியில் வைத்து எரிபொருள் ஏற்றி வந்த வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்துச் சம்பவம் நேற்று (30.04.2018) இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். Read more

இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து விட்டு தந்தையும் விஷம் அருந்திய சம்பவம் யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது.

தந்தையும் 3 பிள்ளைகளும் யாழ்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 37 வயதுடைய தந்தை நேற்றிரவு தனது பிள்ளைகளான 10 வயது மகனுக்கும் 7 வயது மகளுக்கும் உணவில் கிருமிநாசியைக் கலந்து கொடுத்து தானும் உட்கொண்டுள்ளார். Read more

புத்தளம் – உடப்பு கீரியன்கள்ளி பகுதியில் பாழடைந்த காணியொன்றில் இருந்து எரியுண்ட நிலையில் வர்த்தகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உடப்பு பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெரியவெள்ளையன் அருள்முருகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் உடப்பு நகரில் உந்துருளி உதிரிபாகங்களை விற்பனை செய்து வந்தவரென தெரியவந்துள்ளது. Read more

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்­கை­யினை வெளி­யி­டு­வதில் கால­தா­மதம் ஏற்­பட்­டுள்­ள­மை­யா­னது மாகாண சபை தேர்தல் ஒத்­தி­வைக்­கப்­படும் நிலை­மையை உரு­வாக்கி உள்­ளது என்றும் பெப்ரல் மற்றும் கபே அமைப்­புக்கள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன.

மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணய அறிக்கை இது­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை எனவும் அவ் அமைப்­புக்கள் குறிப்­பிட்­டன. இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி குறிப்­பி­டு­கையில், Read more