Header image alt text

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read more

கொச்சியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 227 பயணிகளுடன் இன்று மாலை கிளம்பிய ருடு 167 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன் விமானம், ஓடுதளத்தில் இருந்து விமானம் மேலே எழும்பும் போது விமானத்தின் சக்கரம் ஓடுதளத்தின் எல்லையில் இருக்கும் விளக்கில் மோதியுள்ளது.

இதனை அடுத்து, விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு பயணிகள் பத்திரமாக கீழே இறக்கப்பட்டனர். சிறிது நேரத்திற்கு ஓடுதளம் மூடப்பட்டு, பின்னர் நிலைமை சீரானதும் திறக்கப்பட்டது. Read more

களுபோவில பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் கொ{ஹவெல பொலிஸார் மற்றும் தீ அணைப்பு பிரிவினரின் உதவியுடன் இந்த தீ கட்டுப்பாட்டற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் வங்கியின் முன்னாள் உள்ள பகுதியுத் ஏ.டி.எம் இயந்திரமும் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்திற்கான காரணமே விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்களே இதுவரையில் இனங்காணப்படவில்லை. சம்பவம் தொடர்பில் கொ{ஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.