இலங்கை உட்பட இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த அமெரிக்கா முன்வந்துள்ளது. அமெரிக்காவிற்கான ராஜாங்க செயலாளர் மைக்கல் ரிச்சட் பொம்பியோ இதனை தெரிவித்துள்ளார்.
ஆசியான் பிராந்திய மாநாட்டில் அவர் உரையாற்றுகையில், இதற்காக 30 கோடி அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பிராந்திய நாடுகளின் கடல் பாதுகாப்பு, இடர் மனிதாபிமான உதவி, பரஸ்பரம் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
மேற்கத்தேய நாடுகளில் பணியாற்றும், இலங்கை இராஜதந்திரிகள் பலருக்கு விரைவில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் பொறியியற்பீட கட்டிடத் தொகுதி, மாணவர் விடுதி மற்றும் ஊழியர் விடுதி என்பவற்றின் திறப்புவிழா நேற்று முற்பகல் 11.30அளவில் இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,
மக்கள் முகம் கொடுக்கின்ற அடிப்படைய பிரச்சினைகள் தொடர்பில் தேசிய காவற்துறை ஆணைகுழுவின் கீழ் 7 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டம் நானாட்டன் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 102ஆவது மாதிரிக் கிராமமான ´லூர்து நகர்´ கிராமம் வைபவ ரீதியாக இன்று காலை கையளிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 194 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தலைமையில் யாழ் பொது நூலகத்தில் இன்று மாலை இந்நிகழ்வு நடைபெற்றது.
வவுனியாவில் கடத்தப்பட்ட இரண்டு பாடசாலை சிறுமிகள் அலரி விதை உட்கொண்ட நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வைரவப்புளியங்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று மதியம் 1.00 மணியளவில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களிற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய கவுன்சில் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.