வெலிகடை சிறைச்சாலை கூரை மேல் ஏறி பெண் கைதிகள் சிலர் முன்னெடுக்கும் எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் சட்டத்தின் படி தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் காலை தொடக்கம் வெலிக்கடை சிறைச்சாலை கூரையின் மீது ஏறி 10 பெண் கைதிகள், தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்யுமாறு கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.