பாராளுமன்றத்தை எதிர்வரும் 21ம் திகதிவரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட அமைதியற்ற நிலையையடுத்து நடைபெற்ற கட்சித் தலைர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை பாராளுமன்றத்தில் இனிமேல் பிரதமரையோ அமைச்சரவை அமைச்சர்களையோ ஏற்றுக் கொள்வதில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் கூறியுள்ளார். Read more
ஒன்பது மாகாண சபைகளில், 6 மாகாண சபைகளின் பதவிக் காலங்கள் நிறைடைந்துள்ள நிலையில், விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.