 PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களில் அல்லது அப் பெயர்களுடன் இணைந்த வகையில் முகவரியிட்டு, தனியாகவோ, குழுவாகவோ இயங்கி வரும் சமூக வலைத்தளங்களை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திவிடுமாறு அனைத்து கழக உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களில் அல்லது அப் பெயர்களுடன் இணைந்த வகையில் முகவரியிட்டு, தனியாகவோ, குழுவாகவோ இயங்கி வரும் சமூக வலைத்தளங்களை, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்திவிடுமாறு அனைத்து கழக உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். 
தொடர்ந்தும், இவ்வாறான சமூக வலைத்தளங்கள் இயங்குமாயின், அதன்மூலம் முன்வைக்கப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள் எவற்றிற்கும் கழகம் பொறுப்பேற்க மாட்டாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலங்களில், கழகத் தலைமையின் அனுமதியின்றி, PLOTE மற்றும் DPLF எனும் பெயர்களை சம்பந்தப்படுத்தி இயங்கும் சமூக வலைத்தளங்களோடு கழக உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறித்த விடயங்கள் பற்றிய தீர்மானம் கடந்த 04.11.2018 அன்று வவுனியாவில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
		     பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்றுபிற்பகல்1மணியளவில் நான்காவது முறையாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.
பாராளுமன்றம் பல்வேறு சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில் இன்றுபிற்பகல்1மணியளவில் நான்காவது முறையாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதன் பின்னர் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்தார்.  உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு ஒன்று விதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது என தெரிவித்து உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  பாராளுமன்றத்தை கொண்டுநடத்த தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆகவே எம்மை அரசாங்கமாக அங்கீகரித்து தெரிவுக்குழுவில் எமக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் வேண்டுகோள் விடுத்தனர்.
பாராளுமன்றத்தை கொண்டுநடத்த தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆகவே எம்மை அரசாங்கமாக அங்கீகரித்து தெரிவுக்குழுவில் எமக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபையில் வேண்டுகோள் விடுத்தனர்.  எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச் சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சிக்கும் சார்பாக செயற்படாமல் புதிய பொதுச் சின்னத்தில், தமிழ் மக்கள் கூட்டணி தேர்தலை சந்திக்கும் என தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.