யாழ். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கந்தர்மடம் இந்து மகளிர் வீதியின் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் காரொன்று கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று நண்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ஃ வர்த்தகர் ஒருவர் படுகாயமடைந்துள்hர். கந்தர் மடம் இந்து மகளிர் வீதியில் காரில் பயணித்த குறித்த வர்த்தகர், பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்டுள்ளார். அப்போது எதிரே வந்த ரயில் காரின் மீது மோதி கந்தர் மடம் அரசடிவீதி வரை இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் கார் முற்றுமுழுதாக சேதமடைந்ததுடன் காரில் பயணித்த யாழ் வர்த்தகரான பாலா என்பவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.