Header image alt text

முல்லைத்தீவு மாவட்டத்தில் 12651பேர் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தொகையை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு இறுதி அறிக்கையை வெளியிட்டது.

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794குடும்பங்களைச் சேர்ந்த 12651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை இருபத்தைந்து(25) இடைத்தங்கல் முகாங்களில், 1240குடும்பங்களைச்சேர்ந்த, 3805பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள், நேற்று (21) பதவிப்பிராணம் செய்துகொண்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றன

இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி
விஜயகலா மகேஸ்வரன் கல்வி
ஜே. சி. அலவத்துவள – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிஎரான் விக்ரமரட்ன – நிதி Read more

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு,

ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு
திருமதி எஸ்.எம்.மொஹமட் – தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சு
வீ.சிவஞானசோதி – தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சு
பத்மசிறி ஜயமான்ன – கல்வி அமைச்சு Read more

9 மாகாணங்களுக்கும், எந்தவொர காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று (21) தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தெரிவித்த அவர், தேர்தல்களில் வெற்றிக்கொள்வதை நோக்காகக் கொண்டு, பொதுமக்களின் சொத்துகளை, துஷ்பிரயோகம் செய்து, ஒவ்வொரு மாகாணத்துக்கு ஒவ்வொரு நாள்களில் தேர்தல் நடத்தப்பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இம்முறை, இக்கலாசாரம் மாற்றப்பட்டே தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறினார். Read more

கிளிநொச்சியில் நேற்றிரவு (21) முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சில கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட மக்களை இராணுவத்தினர் மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டதோடு, படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். Read more

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தநிலையில், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், கரைத்துரைப்பற்று ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், பண்டாரவன்னி பகுதியிலுள்ள ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதால், அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. கேப்பாபிலவு – பிரம்படி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய அரசாங்கத்தின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஆதரவாக 102 வாக்குகள் கிடைத்துள்ளதுடன் எதிராக 06 வாக்குகள் கிடைத்துள்ளன.

எவ்வாறாயினும் இந்தக் கணக்கு அறிக்கைக்கு ஆதரவு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னதாக கூறியிருந்தார். இடைக்கால கணக்கு அறிக்கை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குடேரஸ் நேற்று வரவேற்றுள்ளார்.

நியூயோர்க்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், இலங்கையின் ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பாராட்டியுள்ளதாகவும், Read more

இலங்கையில் அண்மையில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை ஜப்பான் வரவேற்றுள்ளது. சட்டத்தின் பிரகாரம் உரிய முறைகள் ஊடாக புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட அரசியல் ஸ்திரத்தன்மை நோக்கிய நடவடிக்கைகளை வரவேற்பதாக இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலும், இந்து பசுபிக் பிராந்தியத்திலும் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை உடனான உறவுகளை வலுப்படுத்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஜப்பானிய அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய இராணுவத்துக்குச் சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள், சுற்றுப்பயணம் மேற்கொண்டு இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

குறித்த கப்பல்கள், எதிர்வரும் 24 ஆம் திகதிவரை இலங்கையில் தரித்து வைக்கப்பட்டிருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.