Header image alt text

மதவாதக் குழு ஒன்றினால் நேற்று உடைக்கப்பட்ட மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கான வளைவை மீண்டும் தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைப்பதற்கு மன்னார் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த வளைவு நேற்று குழு ஒன்றினால் உடைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மன்னார் காவற்துறை நீதவானிடம் முறையிட்டமைக்கு அமைய, முறைப்பாட்டை விசாரணை செய்த பதில் நீதவான் இ.ஹயஸ் செல்தானோ, குறித்த வளைவை தற்காலிகமாக 4 தினங்களுக்கு அமைக்க அனுமதி வழங்கியுள்ளார். இதேவேளை, மன்னார் – திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்காக சீரமைக்கப்பட்ட வளைவு நேற்றையதினம் மதவாதக் குழு ஒன்றினால் உடைக்கப்பட்டமைக்கு எதிராக பல்வேறு தரப்பினரால் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கத் தகடுகள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டுக்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த ஆலயவளாகப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் 25 வௌ;வேறு இலக்கங்களுடன் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதேச மக்கள் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். Read more

யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகளில் பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

படையினர் வசமிருந்த காணிகளை விடுவிக்கும் நிகழ்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்றபோது யாழ் மாவட்ட இராணுவத் தளபதி தர்சன கெட்டியாராச்சி விடுவிக்கப்பட்ட காணிக்கான பத்திரத்தை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என். வேதநாயகத்திடம் கையளித்துள்ளார். தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே 251, 253, 246 ஆகிய கிராம சேவகர் பரிவிலுள்ள காணிகளே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளன. Read more

மன்னார் திருகேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார பலகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக திருகேதீஸ்வர ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மாந்தை சந்தியில் பலவருட காலமாக தற்காலிக அலங்கார பலகையொன்று காணப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

சிவராத்திரியை முன்னிட்டு, அந்த அலங்கார பலகையை தாம் புதுப்பிக்கச் சென்ற வேளையில், கிறிஸ்தவ பாதிரியார்களின் தலைமையிலான சில குழுவினர் வருகை தந்து அதற்கு இடையூறு விளைவித்ததாக அவர்கள் குறிப்பிடுகின்றனர். தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அலங்கார பலகையையும் அந்தக் குழுவினர் உடைத்தெறிந்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். Read more

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயனித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

மன்னாரில் இருந்து நேற்று மதியம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் 6 பேர்கள் கொண்ட இளைஞர் குழு யாழ்பாணம் நோக்கி பயணித்த வேலையில் பூநகரி பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் எதிரே வந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர். Read more

கச்சதீவு அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டு படகுகளுக்கு அனுமதி வழங்க தமிழக அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், மீனவர்களின் வள்ளங்களுக்கும் அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு மீனவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, அவர்களின் படகுகளுக்கு அனுமதி வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. Read more

மஹா சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5ம் திகதி, நாளை மறுதினம் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாவினால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு இது குறித்த பணிப்புரை விடுத்துள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நிஷாம் தெரிவித்தார். அன்றைய தினத்திற்கான பாடசாலை நடவடிக்கைகள் பிரிதொரு தினத்தில் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தைச் சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல, இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.

மான்யூலா கோரேட் (Manuela Gorett) தலைமையிலான நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றி, அக்குழு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். Read more

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி 5ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வடமாகாண பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். குறித்த தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும் மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித்சிங் இலங்கை தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் அவர் சந்திப்புக்களை நடத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை சம்பந்தமாக விளக்கமளிப்பதற்காக தரஞ்சித் சிங் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார். பாகிஸ்தானுடன் அரசியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ எதுவித பிரச்சினைகளும் இந்தியாவுக்கு இல்லை என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.