Header image alt text

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் செலிம். இவர் பாராளுமன்ற உறுப்பினராகவும், ஆளும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.

இவரது மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மஷியுல் ஹக்யு சவுத்ரி மற்றும் மகன்கள் ஜயான் சவுத்ரி (வயது 8), ஜோகன் சவுத்ரி ஆகியோருடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தனர். இவர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. Read more

ட்ரோன் உள்ளிட்ட ஆளில்லா விமானங்களை பறக்க விடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மறு அறிவித்தல் வரை குறித்த நடவடிக்கைகளுக்கு தற்காலிகத் தடை விதிப்பதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரஜைகள் பலரும் தற்பொழுது இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றமையை காணமுடிகின்றது.

இலங்கையை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து, அடுத்த விமானத்திலேயே வெளியேறி செல்வதாகவும் கட்டுநாயக்க விமானநிலைய பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பொறுப்பேற்று இவ்வாறு பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை உரிய வகையில் பயன்படுத்தி இடம்பெற்ற பாரிய இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமை காரணமாக ஜனாதிபதியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. Read more

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகப்படும் வகையில் நபர்கள் மற்றும் வாகனங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் குறித்து அறியக் கிடைத்தால், அதுபற்றி அறிவிக்க, இராணுவத் தலைமையகம் விசேட தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை அறிமுகம் செய்துள்ளது.

சந்தேகத்துக்கிடமான தகவல்கள் தொடர்பில் உடன் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு, இராணுவ தலைமையகம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. தகவல்களை வழங்கவென, 011-2434251, 011-4055105, 011-4055106, 076-6911604, 011-24333335 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. Read more

கடந்த 21ஆம் திகதி தற்கொலைத் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகளைத் தயாரித்த தொழிற்சாலையென சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

அது வெள்ளிரும்புத் தயாரிக்கும் தொழிற்சாலையென அடையாளப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன. குறித்த தொழிற்சாலை கொழும்புக்குட்பட்ட வெல்லம்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத் தொழிற்சாலையில், தற்கொலை தாக்குதலுக்காக பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிப்பதற்காக ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளன. Read more

கேகாலை, வரகாபொல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து SG PH-3779 என்ற வேன் வரகாபொல பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மேலும் ஒரு சந்தேகநபர் ஹெம்மாதகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு தரப்பால் வெளியிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான வாகன இலக்கப் பட்டியலில் இந்த இலக்கமும் உள்ளடங்கியிருந்தது. Read more

இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை தாங்கள் தான் செய்ததாக IS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

IS அமைப்பின் AMAQ செய்திச் சேவையின் ஊடாக இதனை தெரிவித்துள்ளதாக ரெய்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் விஷேட அமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் 38 வெளிநாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், 500 மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்புகொண்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் என அமெரிக்கா இதன் போது உறுதியளித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தி நட்புறவை மீள வலியுறுத்தியமை குறித்து இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். Read more