முல்லைத்தீவு கொக்குளாய் மேற்கு பகுதியில் கிராம சேவையாளரை அச்சுறுத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கொக்குளாய் பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15.05.2019 ம் திகதி முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட கொக்குளாய் மேற்கு 77ஆம் இலக்க கிராம சேவையாளர் பிரிவில் உள்ள கிராம அலுவலகரை கொக்குளாயைச் சேர்ந்த பெரும்பான்மை இன இளைஞர் ஒருவர் அச்சுறுத்தியுள்ளதுடன் அவரின் உந்துருளியின் சாவியை பறித்துக் கொண்டு அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துள்ளார். Read more