உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக, பொதுமக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ,

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டு மனு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த மனுவை முழுமையான நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். வெல்லம்பிட்டய, வென்னவத்தையைச் சேர்ந்த சமன் நந்தன சிறிமான்ன என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க, சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிரதிவாதிகளின் கவனயீனத்தால் ஏற்பட்ட மனித படுகொலைகள் மற்றும் காயமேற்பட்ட சம்பவத்தில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.