Header image alt text

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்துவிட்டதாக மரபணு பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்தவர், தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹஸீம் தான் என, மரபணுப் பரிசோதனை (டீஎன்ஏ) மூலம் உறுதியாகியுள்ளது என அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத் தகவல்கள் உறுதி செய்துள்ளன. Read more

கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கு (ஷரி-ஆ) அனுமதி வழங்காதிருக்கவும் மத்ரசாக்களை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மேற்படி பல்கலைக்கழகம் மற்றும் மத்ரசாக்கள் குறித்து, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், இதுபற்றி கலந்துரையாடப்பட்ட நிலையில், அவ்வனைவரதும் இணக்கத்துடன், மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், பிரதமர் தெரிவித்துள்ளார். Read more

ஐ.எஸ் அமைப்பு குறித்த குறுந்தகவலொன்றை (SMS) தனது கையடக்கத் தொலைப்பேசியில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை எல்ல பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

எல்ல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து எல்ல நகரில் இளைஞரொருவரைக் கைது செய்த பொலிஸார், குறித்த இளைஞனின் கையடக்கத் தொலைப்பேசியை சோதனை செய்தபோது ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு குறித்த குறுந்தகவலொன்று இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். Read more

வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சி.4 ரக வெடி பொருட்கள் 270 கிராம் மற்றும் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா உடையொன்றையும் பொலிஸார் மீட்டதுடன், குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

புத்தலைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து, பிபிலைப் பகுதியின் கொன்கல்லந்த என்ற இடத்தில் அமைந்துள்ள வீடொன்றைச் சுற்றி வளைத்துத் தேடுதல்களை மேற்கொண்டிருந்தனர். Read more

2008-09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7பேரின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் தடுப்பில் உள்ள சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்ற நேவி சம்பத் உள்ளிட்ட 7பேரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 29ம்திகதி வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. கடந்த மாதம் 21ம் திகதி காலை, இலங்கையில் உள்ள 3 தேவாலயங்கள் மற்றும் 3 விருந்தகங்களில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலில் சுமார் 257 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரியான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் என கருதப்படும் சஹ்ரான் ஹஷீமின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேர் நேற்றைய தினம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

28 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் விசேடப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கலகெதர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

59 வயதுடைய அப்துல் ஜவார் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மாஓயாவிலிருந்து 1,475 அலைபேசி சிம் அட்டைகள் கிடைக்கப்பெற்றுள்ளமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொர்புடைய பயங்கரவாதிகள் பயிற்சி பெற்றதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு முகாம் குருநாகல் அலகோலதெனிய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு தெங்கு காணியொன்றில் இவ்வாறு அவர்கள் பயிற்சி முகாமை நடத்திச் சென்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற மொழிபெயர்பாளரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய குருணாகல் பொலிஸ் நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறித்த நபரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது. குறித்த நபர் நேற்று குருணாகல் விஷேட பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட குறித்த நபர் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நீண்ட கால உறுப்பினர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read more

தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பபான அல்கைதாவின் யுத்தப் பயிற்சிகள் தொடர்பான இறுவட்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை, திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் வைத்து, பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த இப்ராஹீம் ஷா மஹ்ரூப் (55வயது) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது, அல் கைதாஇயக்கத்தின் யுத்தப் பயிற்சிகள் அடங்கிய இறுவட்டுகள் 2 கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Read more