Header image alt text

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பகுதியில் இன்றிரவு இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான கலவரத்தையடுத்து நிலைமையயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக குறித்த பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். உடன் அமுலுக்கு கொண்டுவரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு நாளை காலை 7 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read more

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளின் மேல் பிரிவுகளை நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. Read more

தற்கொலை குண்டுதாரிகளினால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும், தேசிய தேசிய தவ்ஹீத் அமைப்புக்கு சொந்தமான பயிற்சி முகாம் ஒன்று மட்டக்களப்பு – காத்தான்குடி – ஒல்லிகுளம் பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

காவற்துறை விசேட அதிரடிப்படையினர் இன்று மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின்போது குறித்த முகாம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி முகாம் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாய பண்ணை போன்று அந்த முகாம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்குத் தேவையான நிதி, இணையத்தளங்கள் ஊடாக, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் சர்வதேசப் பிரிவினைவாத அமைப்புகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

விசேடமாக, பிட் கொய்ன் (Bit Coin) போன்ற சர்வதேச நிதிப் பிரிவுகளைப் பயன்படுத்தியே, இந்தப் பணக் கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இணையத்தளப் புலனாய்வு நிறுவனமொன்றினால் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

யாழ். சாவகச்சேரி கோவிற்குடியிருப்பு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது வீடொன்றில் இருந்து இராணுவச் சீருடை, தொப்பி, ரீசேட், இராணுவச் சின்னம் மற்றும் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இராணுத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடாத்திய தேடுதலின் போதே இராணுவச் சீருடை மீட்கப்பட்டதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Read more

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு பேர் அங்கும்புர, கல்ஹின்ன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் அந்த அமைப்பின் பிரச்சாரங்கள் அடங்கிய 20 இருவெட்டுக்கள் மற்றும் 02 அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். Read more

ஈஸ்டர் ஞாயிறு இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியை சீனா நேற்றைய தினம் வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஷெங் யுவான் சீன செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் நிமல் குமாரிடம் ஒரு கோடி 78 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையைக் கையளித்தார்.

இந்த நிதியுதவி விசேடமாகக் குண்டுத்தாக்குதல்களில் காயமடைந்தவர்களின் சிகிச்சைகளுக்காகப் பயன்படுத்தப்படும். துயரம் நிறைந்த இந்தத் தருணத்தில் இலங்கை மக்களுக்கு ஆதரவாக சீன அரசாங்கம் உறுதியாக நிற்கிறது. Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு இடங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெண்களின் வெள்ளை நிற ஆடைகள், எதிர்வரும் நாள்களில் தேவைப்படும் என்ற நோக்கத்துடனேயே கொள்வனவு செய்யப்பட்டதாகவும் இருப்பினும், அவை எதற்காகக் கொள்வனவு செய்யப்பட்டன என்பது தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் இது பற்றி, கல்முனை குண்டுத் தாக்குதலில் உயிரிந்த சாரா என்ற பெண்ணுக்கே தெரிந்திருந்தது என்றும், பாத்திமா நாதியா தெரிவித்துள்ளார். Read more

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலைத் தாக்குதல்களுக்கு முன்னதாக, தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹ்ரான் காஸிமின் சகாக்களுக்கிடையே இடம்பெற்ற சில கருத்து மோதல்கள் காரணமாக, அன்றை தினம் நடத்தப்படவிருந்த மேலும் பல தாக்குதல்கள் நடத்தப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரியவருகிறது.

இந்தக் கருத்து மோதலானது, தாக்குதல் நடத்தப்பட்ட நாளுக்கு, இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Read more

நாட்டில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு தூதரகங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பின் ஊடாக பாதுகாப்பு சூழல் சம்பந்தமாக நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

பாதுகாப்பு தரப்பினரும் தூதரகங்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். விஷேட பாதுகாப்பு படை குழுவொன்று இதற்கென இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.