முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 21ம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிபதிகளான புவனேக அளுவிகார, ப்ரீதி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என்று சட்டமா அதிபர் இதன்போது நீதிமன்றில் கூறினார். Read more
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மிகெல் மொரடினோஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தற்கொலைக் குண்டுதாக்குதல்களின் சூத்திரதாரியும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவருமான சஹ்ரானிடமிருந்து, 20 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக, அவரது சகோதரி மொஹமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.
நீர்கொழும்பு கிறிஸ்தோபர் வீதி, அன்ட்ரு சினிமா தியேட்டருக்கு அருகில் உள்ள வடிகானிலிருந்து, 109 ரவைகளை, படையினர் மீட்டுள்ளனர்.
600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 60க்கும் மேற்பட்ட வாள்களை தயாரித்து வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜாஎல, ஏக்கலப் பகுதியில் உள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றிலிருந்து வெடிபொருட்களின் உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்திட்சர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொண்ட தொழிலாளர் தினத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக (புளொட்) சுவிஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
தற்கொலை செய்துகொள்ளப்பட்ட, தேசிய தௌஹித் ஜமாஅத் அமைப்பின் தலைவரென கூறப்படும், சஹ்ரான் ஹாஷிமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு வெடிபொருள்கள், இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.
அலவத்துகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவத்துபொல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில், சந்தேகத்துக்கிடமான பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தன.