Header image alt text

யாழ். சில்லாலை சாந்தை வீரபத்திரர் ஆலய அன்னதான மண்டபத்திற்கான அத்திரவாரக்கல் நாட்டும் வைபவம் இன்றுபிற்பகல் இடம்பெற்றது.

புளொட் தலவைரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இன்றைய நிகழ்வில் முன்னாள் மாகாசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிகோ, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் செயற்குழு உறுப்பினர் ந.கணேந்திரன், ஆசிரியர் இதயராஜ், செல்வக்குமார், ஆலய தலைவர் தெனிசன், ஆலய பூசாரியார் பரமநாதன் மற்றும் ஆலய நிர்வாகத்தினரும், ஊர் மக்களும் கலந்து கொண்டிருந்தனர். Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போன்று, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் பாரிய சர்ச்சைகள் காணப்படுவதை தான் ஏற்றுக் கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன தெரிவிக்கின்றார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் சர்ச்சைகள் காணப்படுவதாக வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து, 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை தயாரித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பத்தி விக்ரமரத்ன ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, தெளிவூட்டிய போதே இதனைக் குறிப்பிட்டார். Read more

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருந்த சுமார் 1600 அகதிகள் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னர் பாதுகாப்புக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் வவுனியா கூட்டுறவுக்கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் புனர்வாழ்வு நிலையத்தின் கட்டிடமொன்றில் தங்கி வைக்கப்பட்டிருந்தனர். Read more

இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை காலநிலை மாற்றம் மற்றும் வாழ்வாதாரங்கள் பன்முகப்படுத்தல் மூலம் கட்டியெழுப்புவதற்காக தென்கொரியா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கவுள்ளது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. Read more

கிளிநொச்சியில் நேற்றுமாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் இராமநாதன் கமம் கோவிந்தன்கடை சந்தி மருதநகர் பகுதியை சேர்ந்த செல்லையா பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சியில் இருந்து காக்காகடைசந்தி ஊடாக வட்டகச்சி செல்லும் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த டெக்டருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. Read more

த.வினோயித்

தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு ஒரு அந்தஸ்த்து உள்ளது. அந்த அர்த்தத்தில்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பு மாமா வேலை பார்க்கிறது என முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறினாரா?

என கேள்வி எழுப்பியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அதற்கு வேறு அர்த்தங்கள் உள்ளதா? என்பது தொடர்பாக தனக்கு தெரியவில்லை எனவும் உண்மையில் மாமா வேலை என்ற கருத்தையே தன்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. எனவும் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இல்லத்தில் நேற்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் இதன்போது மேலும் கூறுகையில், Read more

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

திருமலை இந்து கலாச்சார மண்டபத்தில் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது. Read more

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போசா குறுகிய விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். ஜி 20 அமைப்பில் கலந்துக்கொள்வதற்காக ஜப்பான் சென்ற வழியில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.

தென்னாபிரிக்க ஜனாதிபதியுடன் 20 பேரைக் கொண்ட குழுவினர் இலங்கை வந்துள்ளனர். இந்த குழுவினரை வரவேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கரமசிங்க மற்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர். Read more

மரண தண்டனையை மீள அமுலாக்குவதற்கு இலங்கை பரிசீலித்து வருவதாக வெளியான தகவல் குறித்து தாம் ஆழ்ந்த கவலையடைவதாக கனடா தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள கனேடிய தூதரகம் இன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா விடயங்களிலும் மரண தண்டனையைப் பயன்படுத்துவதை தாங்கள் கடுமையாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் எதிர்ப்பதாகவும் கனடா தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர முயற்சித்த மூன்று பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு குவிந்தகாடு கடற்பிரதேசத்தில வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. மீன்பிடி படகுமூலம் இலங்கைக்கு வந்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட மூன்று பேரும் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more