Header image alt text

இந்தியாவுடன் புலனாய்வு தகவல் பரிமாற்றத்தில் இணைந்து தாம் செயற்பட்டு வருவதாக இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராணுவ தளபதி இதனைக் குறிப்பிட்டார். சர்வதேச பயங்கரவாத குழு இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளமையினால், அருகில் உள்ள பிரதான நாடான இந்தியாவுடன் இணைந்தே செயற்பட வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். Read more

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாமலிருப்பது,

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பாதுகாப்புப் படையினரின் செயற்றிறனிலும் மோசமாகத் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்சலேட் தெரிவித்துள்ளார். ஒரு நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அத்தியாவசியம் என்றாலும், Read more

குடிவரவு-குடியகல்வு சட்டதிட்டங்களை மீறி, இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் 7000க்கும் அதிகமானவர்களை இலங்கையிலிருந்து வெளியேற்ற தீர்மானித்துள்ளதாக, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசா மூலம் இலங்கைக்கு வருகைத் தந்து, சட்டவிரோதமாக இலங்கையில் இவர்கள் தங்கியிருப்பதாகவும் இதில் அதிகமானோர் இந்தியா, சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென, குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் பதில் கட்டுபாட்டு பணிப்பாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். Read more

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் தாக்கல் செய்யப்பட்ட, அடிப்படை உரிமைகள் மனு அடுத்த மாதம் 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டமை சட்டவிரோதமானதெனவும், இதனூடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, தன்னை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து அகற்றுவதைத் தடுக்கும் வகையிலான உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்பவர், குறைந்த பட்சம் உயர்தரமாவது சித்தியடைந்தவராக இருக்க வேண்டுமென, திறன் அபிவிருத்தி , தொழில் பயிற்சி பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதியொருவருக்கு நாட்டில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான  தகுதி இருக்க வேண்டும் என்றும், அதற்காக சிறந்த பலமான அரசியல் தலைவரொருவர் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் ஒன்பதாவது பொதுச்சபைக் கூட்டம் 22.06.2019 சனி மற்றும் 23.06.2019 ஞாயிறு ஆகிய இரு தினங்கள் வவுனியா உமாமகேஸ்வரன் வீதி சந்தியில் அமைந்துள்ள ஆதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக கட்சியின் ஸ்தாபகர் அமரர். க. உமாமகேஸ்வரன் அவர்களின் நிகழ்வில்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும் பொதுச்சபை ஏற்பாட்டுக்குழு தலைவருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. Read more

நல்லதொரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், அரசமைப்பின் 18, 19ஆவது திருத்தங்களை முற்றாக நீக்குவது சிறந்ததென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 40ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டம், கொழும்பிலுள்ள பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம், மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டு, இன்று (22), அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டினதும் நாட்டு மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி, கடந்த திங்கட்கிழமை முதல், மதகுருமார்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. Read more