புதிய ஜனநாயக முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினர் ஒன்றிணைந்து நாட்டில் ஜனநாயக அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு உறுதியளித்திருப்பது மிக முக்கியமான விடயமாகும்.
நாட்டில் அபிவிருத்தி, சமத்துவம், சுயாதீனத்துவம் என்பவற்றை ஏற்படுத்தி, சௌபாக்கியமானதொரு இலங்கையை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு பயணிப்பதே எமது இப்புதிய கூட்டணியின் முக்கிய இலக்கு என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். Read more
யாழ். வலி தென்மேற்கு பிரதேச சபையின் கீழுள்ள ஆனைக்கோட்டை உப அலுவலகத்தில் அமைந்துள்ள நூலகத்தில் உதவி நூலகராகக் கடமையாற்றும் பெண் ஊழியரான திருமதி கௌதமி தனுசீலன் என்பவர் கடந்த சனிக்கிழமையன்று (26.10.2019) கடமை நேரத்தின்போது நூலகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபரொருவரால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் சோதனைக்காக 2 ரோபோக்கள் இன்று முதல் பயன்படுத்தப்படுகின்றன.
2019 ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் தபால் மூலம் வாக்களிக்க முடியாமல் போன தபால் மூல வாக்களிப்போர் இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரையிலான காலப்பகுதியில் தமது அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தனவினால் சுபசாதனை திட்டத்தின் கீழ் 21, 54 மற்றும் 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 30 செயற்கை உறுப்புக்கள் இப்பிரதேசத்தைச் சேர்ந்த விஷேட தேவையுடைய நபர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான மொஹமட் சஹ்ரான் ஹசீமின் பின்தொடர்பவர்களுடையது என கருதப்படும் தமிழகத்தின் 6 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.