ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சட்டப்பூர்வமாக அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். கோட்டாபய ராஜபக்ஷ தற்போதும் அமெரிக்க குடிமகன் என்று பரவிவரும் வதந்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். Read more
கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13ம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் நான்காயிரம் பேரை ஈடுபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
யார் வெற்றி பெற்றாலும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம் எனும் தொனிப் பொருளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் கவனயீர்பு ஊர்வலமும் ஆர்பாட்ட போராட்டத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
வாக்காளர் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்காளர்களும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இந்த நாட்டில் எவ்வாறெல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ அவ்வாறு கொள்ளையடித்து நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக்கிய ராஜபக்ஷவினரிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புத்தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.