errயாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவர் பொலிஸரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றையதினம் வட மாகாணத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் அரச பேருந்து சேவைகள் நடைபெறாத நிலையில், வியாபார நிலையங்களும் மூடப்பட்டு சன நடமாட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுவதால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்துடன் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், கல்வி நடவடிக்கைகளும் முற்றாக முடங்கியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய ஏழு தமிழ் கட்சிகள் இன்றைய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

sd sddsd sddsddd sds