img_9224வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழா முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி. மீரா குணசீலன் தலைமையில் இன்று (08.12.2016) திருநாவற்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் திரு.கந்தையா சிவநேசன் (பவான்) அவர்களும், சிறப்பு அதிதிகளாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) மற்றும் முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர் திருமதி. அருள்வேல்நாயகி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திரு.சி.ரவீந்திரன், குருமன்காடு பொலிஸ் அதிகாரி திரு.இலங்கேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன்,முன்பள்ளி பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், திருநாவற்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள், கிராம முக்கியஸ்தர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மங்கல விளக்கேற்றல் நிகழ்வுடன் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் உரை மற்றும் பரிசளிப்பு வைபவத்துடன் இனிதே நிறைவுபெற்றது. வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் பெற்றோர் தின விழாவிற்கு திரு. த.நாகராஜா (பொக்கன்) அவர்கள் அனுசரணை வழங்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

img_9211 img_9230 img_9232 img_9234 img_9235 img_9241 img_9257 img_9275 img_9279 img_9301 img_9320 img_9327 img_9348 img_9437 img_9449 img_9475 img_9489 img_9491