flightபுதிய A320 NEO வகை விமானங்கள் ஐந்து இலங்கை விமான சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக, சிறீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

குத்தகைக்கு பெறப்படும் குறித்த விமானங்கள் 2017ம் ஆண்டு முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதேவேளை, நவம்பர் முதல் லண்டனுக்கான விமான வேவையிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதன்படி தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் லண்டனுக்கான விமான போக்குவரத்துக்களை ஒரு வாரத்துக்கு ஒன்பதாக அதிகரிக்கவுள்ளதாகவும் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 விமானப் போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக, இலங்கை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் 47 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இலக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது. அடுத்த வருடம் ஜனவரிமுதல் ஏப்ரல்வரை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை பராமரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளமையே இதற்குக் காரணம்.