raviநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரவி கருணாநாயக்கவினால் மதுபான நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகையை இரத்துச் செய்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை என்பதாலேயே நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.