solothun01சுவிட்சர்லாந்தின் சொலத்தூன் மாநிலத்தில் வசித்து வந்த இரு இலங்கைத் தமிழர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இச்சம்பவத்திற்கு காரணமாகும்.

சொலத்தூன் மாநிலத்தின் ரயில் நிலையத்தின் கீழ்த்தளத்தில் அமைந்துள்ள கடை அருகே, 25.10.2016 செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் தொழில் ரீதியாக (விழாக்களுக்கு வீடியோ எடுத்தல்) நண்பர்களாக இருந்தவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுடப்பட்ட வவுனியா குருமன்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கார்த்திக் பாலேந்தின் என்ற இளைஞர் ஆபத்தான நிலையில் பொலிசாரால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாள் மதியம் இறந்துள்ளார்.இவர் கனடாவில் வசித்த இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் முடித்து 6மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பித்தக்கது.

மேற்படி இத் துப்பாக்கிப் பியோகத்ததை நடத்தியதாக பொலிசில் சரணடைந்திருக்கும் (சோலோ மூவி) 46 வயதுடைய வசி என்பவர் யாழ். அச்சுவேலி பத்தமேனியைச் சேர்ந்தவர் எனவும் செய்திகள் மூலம் தெரியவந்தள்ளது.