Header image alt text

Ilancheliyan-judgeயாழ்ப்பாணத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் வாள்களுடன் அட்டகாசம் புரிவோருக்குப் பிணை கிடையாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று கூறியுள்ளார்.

வாள்வெட்டுக்களில் ஈடுபட்டிருந்தது மற்றும் கைக்குண்டு உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மாணவன் இரத்திரனசிங்கம் செந்தூரனைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி பிணை மனு, நேற்று மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிணை வழங்க மறுப்புத் தெரிவித்து, பிணை மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். Read more

vote2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தம் தொடர்பில் 76,400 மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த மேன்முறையீடுகள் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார். Read more

jaffna-campusசம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைகழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களின் கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்தினர் உரிய தீர்வு வழங்காததன் காரணமாகவே அடையாள பணிபகஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்விசார ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். Read more

hakeem met 1சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வளிப்பதற்கான சிபார்சுகளை செய்யக்கூடிய வகையில் சுயாதீன தேசிய ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென்ற சிறீலங்காக முஸ்லிம் காங்கிரஸின் பரிந்துரையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளதோடு அது தொடர்பிலான செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களையும் நல்குவதாகவும் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறுபான்மை இன விவகாரங்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா நேற்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரைச் சந்தித்தபோது Read more

ethirisinghaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது தான் என கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் சடலத்தை இன்று தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கல்கிசை நீதவான் இன்று பிறப்பித்துள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரியின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்வதற்காக அவரது சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

justice-of-peaceயாழ். கல்வியங்காடு புதியசெம்மணி வீதியில் அமைந்துள்ள சமாதான நீதவான் வீட்டின் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். சமாதான நீதவான் சுப்பிரமணியம் நமசிவாயம் என்பவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் நேற்று இரவு 9.00 மணியளவில் மதுபானப் போத்தல்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் மேலும் தெரியவருவதாவது,

இத் தாக்குதல் சம்பவம் ஒரு மாத காலமாக இடம்பெற்று வருவதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் 21-09-2016 அன்று முறைப்பாடு ஒன்றும் செய்யப்பட்டிருக்கின்றது. Read more

jaffnaயாழ் தட்டாதெருச் சந்தியில் ஆட்டோ ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்றுகாலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

img_9614வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் 17.10.2016 திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு முன்பள்ளியின் ஆசிரியர் திருமதி.மீரா குணசீலன் அவர்களின் தலைமையில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் திரு ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ்த்தேசிய இளைஞர் கழகத்தின் ஆலோசகர்களில் ஒருவரான திரு முத்தையா கண்ணதாசன், Read more

14712557_1216530271702104_6465780896257084779_oவவுனியா விபுலாநந்த கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் 16.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 11.30 மணிவரை கல்லூரியின் அதிபர் திரு எஸ்.அமிர்தலிங்கம் தலைமையில் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் வளர்ச்சியிலும், துரித அபிவிருத்தி பணியிலும் பழைய மாணவர்களை உள்வாங்கி, புது உத்வேகத்துடன் கல்லூரியை முன்னணிப் பாதையில் கொண்டுசெல்ல அமைதியான முறையிலும், ஆக்கபூர்வமான கருத்துக்களுடனும் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.
Read more

a3எமது புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் அவர்கள் தனது தந்தை பரஞ்சோதி (17.10.2016) மற்றும் தங்கை ராஜேஸ்வரி (16.10.2016) பிறந்த தினத்தினை முன்னிட்டு

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விழிப்புலணற்ற மற்றும் விசேட தேவைக்குரிய இனிய வாழ்வு இல்ல மாணவர்களுக்கு நேற்றையதினம் சிறப்பு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளதுடன். தீபாவளி தினத்தினை முன்னிட்டு இல்ல மாணவர்களுக்கு சுமார் 113,000 ரூபா பெறுமதியான புத்தாடைகளையும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினுடாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
Read more