எதிர்வரும் 18.12.2016 (ஞாயிற்றுக்கிழமை) நாடளாவிய ரீதியில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால், இளைஞர் விவகார அமைச்சினாலும் இலங்கை இளைஞர்களின் குரலை அங்கீகரிக்கப்பட்ட மேடை ஒன்றினூடாக
தேசிய மட்டத்திற்கு உயர்த்தும் நோக்குடன் நடைபெறவுள்ள நான்காவது இளைஞர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்மனுக்கள் நேற்றுக்காலை 8.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் வவுனியா பிரதேச செயலகத்தில் வவுனியா மாவட்ட வேட்பாளரான ஊவா வெல்லச பல்கலைக்கழக, முகாமைத்துவ பீட மாணவன் ஸ்ரீகரன் கேசவன் காலை 09.30 மணியளவில் தனது வேட்புமனுவை தனது மாவட்ட ஆதரவாளர்களுடன் வவுனியா பிரதேச செயலகத்தில் கையளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.