Header image alt text

Varatchiஎதிர்வரும் தினங்களில் வறட்சி நிலையை எதிர்கொள்வதற்கு சுகாதார துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் சுகாதார அமைச்சின் செயலாளர் அநுர ஜயவிக்ரமவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. Read more

nirmalஅரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினாலும், தீர்மானங்களை எட்டமுன்னர் அவற்றை பொதுமக்களின் கருத்துக்கணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். Read more

mulaiமுல்லைத்தீவு   மாவட்டத்தில்  கரைத்துறைப்பற்று பிரதேச  செயலாளர்  பிரிவிற்கு  உட்பட்ட  தண்ணிமுறிப்புக்குளத்தில் நேற்று  நள்ளிரவு  மீன்பிடி  நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ், முஸ்லிம்  மீனவர்களின் மீன்பிடிப்படகு   ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன்  மோட்டார் சைக்கிள்   ஒன்றும்   சேதமாக்கப்பட்டு    குளக்கட்டில் இருந்து  தூக்கி வீசப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, Read more

denkuகிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த முதலாம் திகதியில் இருந்து இன்று (13) வரைக்கும் சுமார் 28 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

டெங்கு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சியில், மாவட்ட சுகாதார பிரிவினர், இராணுவத்தினருடன் சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேச சபை என்பன இணைந்து சிரமதான பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். Read more

Tamilnadu04தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட வேண்டும் என கோரி பல்வேறு மாணவர் அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை இளைஞர்கள் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.  
மாநிலம் முழுவதும் திமுக கட்சியின் சார்பாக வெள்ளியன்று அனைத்து மாவட்ட தலைமையகங்களிலும் ஜல்லிக்கட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தப்பட்டது. Read more

fddfமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் வைத்து மூன்று தமிழ் பண்ணையாளர்களை பிக்குமார் தாக்கிய சம்பவ இடத்திற்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்தார்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான பண்ணையாளர்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களை சந்தித்ததுடன், சம்பவத்தையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்து மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை துப்பாக்கியால் சுடுவது, கால்நடைகளை கடத்துவது, பெரும்பான்மை இனத்தவரினால் தமிழ் பண்ணையாளர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது. Read more

housing schemeவவுனியா மாவட்டத்தில் 10ஆயிரம் பொருத்துவீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு வருகின்றது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ணப்பப் படிவங்களின் விநியோகம் அரசஅதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.

கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது. Read more

Mrs nagaranjani Ainkaranதைப்புத்தாண்டின் தமிழ் மக்களது வாழ்வு என்றும் உறுதியாக மலர்ந்திட வேண்டும் என்பதில் நம்பிக்கையாகவும் கடந்துவிட்ட எமது பாதைகளை கனவுகளோடும் களம் பல தந்த எம் உறவுகளின் தியாகம் வென்றிடவும் நாம் நம்பி வாக்களித்த வாழ்வு மெய்ப்பட்டிடவும்

என்றும் ஐந்து தசாப்பதங்களுக்கும் மேலாக சிந்திய உதிரங்கள் அரசியல் தீர்வு கிடைத்திட இவ் நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்பதோடு, நாம் தமிழர் என்ற உறவோடு ஒயாது எம் பாதங்கள் இலச்சியம் நோக்கி நகர இந் நாளில் ஒன்றிணைந்து சபதம் எடுத்திடுவோம். Read more

wedrerவேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று பிற்பகல் 1மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் தாண்டிக்குளம் பகுதியில் உள்ள கராஜ் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய நிம்புஜோர்ஜ் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இராணுவ வாகனம் அதிக வேகமாக சென்ற காரணத்தினாலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read more

autoவவுனியா சாஸ்திரிகூழாங்குளம் வீதியில் இன்றுகாலை 8 மணியளவில் இரு முச்சக்கர வண்டிகள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்குளத்திலிருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.