Header image alt text

P1410794கிழக்கிலும் வடக்கிலும் வாழுகின்ற தமிழர்கள் எப்போதும் ஒரே குரலில்தான் பேசுவார்கள். எப்போதும் ஒரே குரலில் தான் தங்களுடைய கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று நீங்கள் உலகிற்கு ஒரு செய்தியைச் சொல்லியுள்ளீர்கள் என்று புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எழுக தமிழ் எழுச்சிப் பேரணியைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு மாவட்டம் தமிழ் தேசிய உணர்விலும் போராட்டத்திலும் வேறு எந்த மாவட்டத்திற்கும் சலைத்தது அல்ல. கிழக்கு மாகாணத்திலே அதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்துதான் அனைத்து இயக்கங்களுக்கும் மிகப் பெருந்தொகையான இளைஞர்கள் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்வதற்கு சேர்ந்தார்கள் என்ற உண்மையை நான் இங்கு கூறித்தான் ஆகவேண்டும். Read more

q2ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த கி.லதீஸ் அவர்கள் தனது பிறந்த நாளை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள 102 பெண் சிறார்கள் தங்கியிருக்கும் பாரதி இல்ல உணவு களஞ்சியத்திற்கு இன்று 250 கிலோ சம்பா அரசிப் பைகளை அன்பளிப்பாக வழங்கி அவர்களின் களஞ்சியத்தில் உள்ள அரிசி இருப்பை மேலும் உறுதிபடுத்தியுள்ளார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு இல்ல சிறார்களின் உணவு பொருட்களின் இருப்பை உறுதிபடுத்தியுள்ள கி.லதீஸ் அவர்களுக்கு வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும் இல்ல சிறார்கள் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்ளும் தருணம் இவர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள்ளுடன் பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்ந்து நற்பணிகள் செய்து வாழ இறைவனை பிராத்திக்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்). Read more

P1410775தமிழ் மக்களுக்கு சரியான தீர்வொன்றை இந்த அரசாங்கம் வழங்கும் வரையில் அறவழி போராட்டம் தொடரும் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – நாவற்குடா மைதானத்தில் இடம்பெற்ற கிழக்கு எழுக தமிழ் நிகழ்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசுகையில், ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை எதிர்பார்த்தே இந்த நல்லாட்சி கொண்டுவரப்பட்டது. அதற்கு அப்பால் உடனடி தீர்வுகளை எதிர்பார்த்திருந்தனர். அதன் அடிப்படையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், தமிழர்களுடைய வடகிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படவேண்டும், காணாமல் ஆக்கோப்பட்டோருக்கான நீதிகள் வழங்கப்படவேண்டும், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சிறந்த வாழ்வாதரத் திட்டங்களை ஏற்படுத்தப்படவேண்டும்,
Read more

tpcதமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்கிற அதேவேளை, முஸ்லிம் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் இருசாராரும் சேர்ந்து பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என வட மாகாண முதல் அமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன் வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இச் சந்திப்பு தொடர்பாபக பத்திரிகையாளர்களுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார். Read more

P1410789தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். Read more

sddfdfdfதமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமானது.

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். Read more

qweqwவடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை, மட்டக்களப்பு நகரில் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் யாழ்.மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர். நாளை மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது. Read more

P1410574யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றுகாலை 7.00மணியளவில் ஏழாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு புதிய கட்டிடத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார்.

இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னைநாள் கிராம சேவையாளர் ஞானசபேசன், ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர், செயலாளர் அங்கத்தவர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஏழாலை சொர்ணாம்பிகை சமேத அம்பலவாணேசுரர் ஆலயத்தால் வழங்கப்பட்ட மேற்படி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான காணியில் புதிய கட்டிடத்தினை கட்டி முடிப்பதற்கு 40லட்சம் ரூபாய் செலவாகுமென்று மதிப்பிடப்பட்டுள்ளது. Read more

australiaகிழக்கு மாகணத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு அவுஸ்ரேலியா உதவுமென இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகர் ப்றேயிஸ் ஹ்ட்சன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளில் தேவைகளை கவனிக்கவேண்டி இருப்பதால் தகுந்த பயிற்சியும் ஆலோசனைகளும் உல்லாசப் பயணத்துறையில் புதிதாக இணைவோருக்கு அளிக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வாழ்க்கைத்திறன் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து கிழக்கிலும் வட மத்திய மாகாணத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படும். Read more

kiriyellaபுதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் விமல் வீரவங்ச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பில், 13ம் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகாண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை தற்போது புதிய அரசியலமைப்பின் நிமித்தம் ஒரு பிரிவையேனும் தயாரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.