Header image alt text

ahiraviraj newவடக்கு கிழக்கு மாகாணங்களில் தொண்டர் ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

vithya suspectsபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் 05ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இப்படுகொலையுடன் சம்பந்தப்பட்ட 9 சந்தேக நபர்களுக்குமான பிணை வழங்கக்கோரி யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணை யாழ். மேல் நீதிமன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும்நிலையில், குறித்த வழக்கு விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. Read more

sfdமட்டக்களப்பு பொலிஸ் விடுதிக் கட்டடத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரிக் கடவை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட இரண்டு யுவதிகள் மீது பொலிஸாரின் வாகனம் மோதியதில் அவர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இன்றையதினம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது குறித்த வாகனத்தைச் செலுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

busகடந்த வெள்ளிக்கிழமை இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சருக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தினை கண்டித்தும் மற்றும் புதிதாக திறந்துவைக்கப்பட்ட வவுனியா பேருந்து நிலையம் பயன்படுத்த முடியாமல் இருப்பதனை கண்டித்தும் நாளையதினம் வவுனியா தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது.

நாளைகாலை 7 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள போராட்ட குழுவினர் யாழ் மாவட்ட போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளருக்கு மகஜர் ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர். இது தொடர்பாக யாழ் மாவட்ட தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் கெங்காதரன் கூறுகையில், கடந்த வாரம் யாழ் மாவட்ட தனியார் பேருந்து போக்குவரத்து சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. Read more

sf (1)மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை சேர்மன் வீதியிலுள்ள ராமலிங்கம் யோகராசா என்பவரின் குடிசை வீடு கடந்த 02ஆம் திகதி எதிர்பாராத விதமாக தீப்பிடித்தமையினால் வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகின. அத்துடன், உடுதுணிகூட இல்லாத நிலையில் 7பேர் கொண்ட குறித்த குடும்பம் மரத்தின் கீழ் நிர்க்கதிக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் 02.02.2017அன்று தீயினால் எரிந்த வீட்டுப் பகுதிக்கு 03.02.2017 அன்றுகாலை சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் முதல் கட்டமாக பாடசாலை செல்லும் இரு பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்ததோடு, மீண்டும் அவர்களுக்கான ஏனைய உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். Read more

zxcxzcஎதிர்வரும் 10.02.2017 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ”எழுக தமிழ் எழுச்சிப் பேரணி” தொடர்பில் தெளிவூட்டும் துண்டுப்பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ”எழுக தமிழ்” ஏற்பாட்டுக் குழுவினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

sas (2)முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலத்தை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமென கோரி விமானப்படை முகாமின் முன்பாக சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என கடந்த மாதம் 31ஆம் திகதி தொடக்கம் முன்னெடுத்துள்ள தொடர் கவனயீர்ப்பு போராட்டம் எட்டாவது நாளாக இன்றுவரை தொடர்கின்றது.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கிலும் இந்த போராட்டத்துக்கு இன்னும் பல இளைஞர்களை திரட்டி ஆதரவு வழங்கும் நோக்கிலும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், ஆசிரியர் சங்கமும் இன்றையதினம் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து தமது பூரண ஆதரவை தெரிவித்துள்ளனர். Read more

fdfdமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட சத்துருக்கொண்டான் பிரதேசத்திலுள்ள ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய கதவுகள் உடைக்கப்பட்டு இனந் தெரியாதவர்களினால் ஆலயத்திலுள்ள பெறுமதியான பொருட்கள் நேற்று கொள்ளையிடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்றுகாலை வேளையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் ஆலயத்திற்கு அருகிலுள்ள நீரோடைக்கு அருகில் ஆலயத்தின் உண்டியல் கிடப்பதை கண்டதுடன், குறித்த விடயத்தை ஆலய அரங்காவல் சபையினரிடம் தெரியப்படுத்தியதும் நிருவாகம் ஆலயத்தை பார்வையிட்டவேளை ஆலயத்தின் கதவுகள் உட்பட ஆலய கூரைகள் உடைக்கப்பட்டு கொள்ளை இடம்பெற்றிப்பதை அறிந்து மட்டக்களப்பு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். Read more

xcvcvசயிடம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை மூடக்கோரியும் இலவச கல்வியை பாதுகாக்க கோரியும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்தில் இருந்து மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக மட்டக்களப்பு நகருக்கு சென்று பின், கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை அடைந்து வாவிக்கரையூடாக பீடத்தினை சென்றடைந்தனர். Read more

sasikalaபோயஸ்கார்டனில் 3 மணி நேரம் நடந்த சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக முதல்வர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகலில் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் முதல்வராக வரும் 9ம் தேதி பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more