Header image alt text

sfdfdfdதகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர், வெகுசன ஊடக மற்றும் நாடாளுமன்ற சீர்த்திருத்த அமைச்சிடம் தகவல் கோரி, பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க விண்ணப்பித்திருந்தார்.

தகவல் கோரப்பட்டு 14 நாட்களுக்குள் அதற்காக பதில் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில், ரஞ்சன் ராமநாயக்க கோரிய தகவலுக்கு நான்கு நாட்களில் பெற்றுக்கொடுக்க அமைச்சின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ரஞ்சனின் கோரிய தகவலுக்கு இன்றைய தினம் பதில் பற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமையை உத்தியோகப்பூர்வமாக்கும் நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அலரி மாளிகையில் இன்று நடைபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

maithriவறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபா நிவாரண உதவி வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் உள்ளடங்கிய குழு ஒன்றை ஸ்தாபித்து வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உண்மையான தரவுகளை சேகரித்ததன் பின்னர் இந்த நிவாரண உதவியை வழங்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் சிறுபோகம் ஆரம்பிக்கப்படும் வரை இந்த நிவாரணத் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். வறட்சி காரணமாக விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

P1420066தமது நிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி சுழற்சி முறையிலான அடையாள உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்க்கு முன்னால் பொதுமக்களுக்கு சொந்தமான 19-1/4 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த 3ஆம் திகதி தொடக்கம் இந்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தமது சொந்த நிலங்களையும் வீடுகளையும் பாதுகாப்பு தரப்பினர் விடுவிக்கவேண்டும் என்றும் காணிகள் விடுவித்த பின்னரே போராட்டத்தை கைவிடுவோமென்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு இன்றுமுற்பகல் நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
Read more

image-0-02-06-2385f724d2c740cfce9625aead960254300b0a838300909c99e65bf2402899fc-Vமட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் ஆயித்தியமலை கிராம அபிவிருத்தி சங்கக் கட்டிடத்தில் நேற்று 15.02.2017 புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தார். இக்கூட்டத்தின்போது கிராம மக்களினால் கிராமத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றில் மிக முக்கியமான விடயமாக குடிநீர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இம் மக்களின் பாரிய பிரச்சினையாக குடிநீர் பற்றாக்குறை காணப்படுகின்றமை இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. வறட்சி காலங்களில் மக்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மிகவும் சிரமங்களை எதிர்கொள்வதாலும், சுத்தமற்ற குடிநீரைப் பருகுவதால் பலவிதமான தொற்றுநோய்கள் ஏற்படுவதாகவும் மக்கள் இதன்போது குறிப்பிட்டதுடன், இப்பிரச்சினைகளை பலரிடம் கூறியும் அதற்கான தீர்வு எதுவும் இதுவரை எட்டப்படவில்லை எனவும் வேதனையுடன் கூறினார்கள். Read more

P1420023தமது சொந்த நிலங்களில் கால் பதித்த பின்னரே எமது போராட்டத்தை நிறுத்துவோமென கடந்த 31.01.2017 தொடங்கி இன்றுடன் 17ஆவது நாளாக தங்கள் 84 குடியிருப்புக் காணிகளுக்காக சீரற்ற காலநிலையையும் பொருட்படுத்தாது சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என அனைவருமாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் கேப்பாப்புலவு மக்களை இன்றுகாலை புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் அவர்கள் போராட்டம் நடாத்திவரும் இடத்திற்கு நேரில் சென்று அவர்களது போராட்டத்திற்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், எங்களின் காணிகளை விடுவிப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் எம்.சுவாமிநாதன் அவர்கள் அரசாங்க அதிபரின் ஊடாக ஒரு அறிவித்தலை கொடுத்திருந்தாலும், அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் எங்கள் காணிக்குள் கால் பதிக்கும்வரையில் போராடுவோம் என்று கூறினார்கள்.
Read more

gfgfgயாழ்ப்பாணம், வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாலயத்தின் தற்போதைய அதிபரை மாற்றி முன்னைய அதிபரான திரு. ந.இரவீந்திரன் அவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கையெழுத்திட்ட கடிதமொன்று வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கடித்தில், எமது பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்ட பின்னர் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் செல்கின்றனர். தரம் 5 வகுப்பிற்கான மேலதிக வகுப்புகள், செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் எதுவும் நடைபெறுவதில்லை. மாணவர்களுக்கு வரும் உலக உணவுத்திட்டப் பொருட்கள் மாணவர்கட்டு வழங்கப்படுவதைக் குறைத்து வேறு தேவைகட்டு பய்னபடுத்தப்படுகின்றது. தரம் 5ற்கான மேலதிக வகுப்பு எடுக்கும் ஆசிரியரை மேலதிக வகுப்பு எடுக்கவிடாது வெளித் தேவைகட்டு பயன்படுத்துகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more

palanisamyதமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக இன்று அழைப்பு விடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றுமாலை 4.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். இரண்டு மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். Read more

P1410864யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் 2017 இல்ல விளையாட்டுப் போட்டி இன்று 15.02.2017 புதன்கிழமை பாடசாலையின் அதிபர் நா.மகேந்திரராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். விருந்தினர் கௌரவித்து அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றதைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றுகையில்,

தங்களுடைய குழந்தைகளுக்கு யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் முதலாம் வகுப்புக்கு அனுமதி பெற்றுத் தரும்படி மார்கழி மற்றும் தை மாதங்களில் மிகப் பெருமளவிலான கிராமத்துப் பெற்றோர்கள் எங்களிடம் வந்து வினயமாகக் கேட்டுக் கொள்வார்கள். அதிபர் மகேந்திரராஜா அவர்கள் தனிப்பட்ட ரீதியில் உங்களுடன் நண்பர் என்கிற ரீதியில் நீங்கள் கூறினால் அவர் அனுமதி தருவார் என்றும் கூறுவார்கள். அப்போது அவர்களுக்கு நான் கூறுவது, உங்களுடைய அயற் பாடசாலையை சிறப்புறச் செய்யவேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் அயற் பாடசாலைகளில் உங்கள் பிள்ளைகளை அனுமதியுங்கள். Read more

P1410815யாழ். கோண்டாவில் இந்துக் கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி 2017-நிகழ்வு நேற்று (14.02.2017) செவ்வாய்க்கிழமை காலை கல்லூரியின் அதிபர் திரு. மோகநாதன் அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக லோ.விஸ்வநாதன் (நிர்வாக உத்தியோகத்தர் கல்வியமைச்சு, வடமாகாணம்), சுபாஸ் மஞ்சுளா கந்தவல (கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான சி.தினேசன் (வைத்தியர், யாழ் போனதா வைத்தியசாலை), திரு. க.தர்சன், திருமதி த.லீலாராணி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். Read more

dfஅரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் கூட முன்னேற்றம் காண முடியாதுள்ளதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்க்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநி மு. மக்கோலின் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங்லாய் மார்க் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு முதல்வர், நல்லிணக்கம் தொடர்பாக பலவித செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அவை எந்தவகையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சென்றடைகின்றன என்பது பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டுமென்று குறிப்பிட்டேன். Read more