uk 05லண்டனில் பாதசாரிகள் மீது வாகனமோதல், கத்திக்குத்து, 6 பேர் கொலை, 48 பேர் காயம்

லண்டனில் நேற்றிரவு நடந்த தாக்குதல் சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்றும் இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப்  லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர்.லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்குள்ளார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார்.

அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. தாக்குதல்காரர்கள் மூவர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
வெள்ளை வேன் லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்தாரிகள் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது

அண்மையில் மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது.