gurukularajahவடமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா தனது பதவியை இராஜனாமா செய்துள்ளார்.  வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது இராஜினாமா கடிதத்தினை சமர்பித்துள்ளார்.

ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர்கள் இருவரும் பதவி விலக வேண்டுமென முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை பரிந்துரைந்திருந்தது.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற வடமாகாண சபை அமர்வின் போது, முதலமைச்சர் இரு அமைச்சர்களையும் பதவிகளை தியாகம் செய்ய வேண்டுமென்று குறிப்பிட்டிருந்ததுடன், கடந்த 15 ஆம் திகதி இரு அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதத்தினை சமர்ப்பிக்குமாறும் அறிவித்திருந்தார்.

இந் நிலையில், தழிழரசு கட்சி உறுப்பினர்களினால் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டு குழப்ப நிலைகள் காணப்பட்டிருந்ததையடுத்து, மத தலைவர்களின் சமரச பேச்சுவார்த்தையின் பின்னர் இன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண கல்வி அமைச்சராக இருந்த குருகுலராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.