Header image alt text

GMOசைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை எதிர்த்து நாளை தொடக்கம் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளைய தினத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

private busதிருகோணமலையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் நேர கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பயணிக்கின்ற அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். Read more

uniformவவுனியா தேக்கவத்தைப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் இராணுவச்சீருடை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுகாலை வவுனியா தேக்கவத்தைப் பகுதி 9ஆம் ஒழுங்கையில் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினையுடன் இராணுவச்சீருடை இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இராணுவ சீருடையை மீட்டுள்ளனர். Read more

llllllllllllவடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

மல்வத்து பீட மகாநாயக்கரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக மல்வத்துபீட மஹாநாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார். Read more

UN human right commssionஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடர் சுவிஸர்லாந்தின் ஜெனீவாவில் நாளை ஆரம்பமாகவுள்ளது. ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத்த ஆரியசிங்க தலைமையிலான குழு இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையை பிரதித்துப்படுத்தவுள்ளது.

நாளைய ஆரம்ப நிகழ்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் சிறப்புரையாற்றவுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இலங்கையின் விவகாரங்கள் நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்படவில்லை. எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தில் இலங்கை குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Read more

thilak marapana indian prime ministerஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் சட்டத்தரணி திலக் மாரப்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வாழ்த்துச் செய்திகளை இந்திய பிரதமருக்கு எடுத்துரைத்ததாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இலங்கைகும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும் என இதன்போது அமைச்சர் திலக் மாரப்பன குறிப்பிட்டுள்ளார். Read more

saththurukondan massacre1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தினையே உலுக்கிய சம்பவமான சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினம் நேற்று மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனியச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட சுற்றுவிளைப்பின்போது சிறுவர்கள் முதியவர்கள் பெண்கள் என 188க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். இந்நிலையில் அனைவரும் சத்துருக்கொண்டான் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டதாக அதில் இருந்து தப்பிவந்த ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அது படுகொலையாக கருதப்பட்டு வருடாந்தம் அனுஸ்டிக்கப்படுகின்றது. Read more

vavunya01வவுனியா நகரத்திலுள்ள தமிழ் பெரியார் சிலைகளை பராமரித்தலும், விழாக்களை செய்வது சம்மந்தமான சகலந்துரையாடல் 07.09.2017 அன்று நகரசபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இவ் சகலந்துரையாடலின் இறுதி தீர்மானமாக தமிழ் பெரியாரின் சிலைகள் அனைத்தும் வவுனியா நகரசபையே சபொறுப்பேற்றுள்ளது. Read more

manikam01 கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் மாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ நினைவாக வவுனியா புதிய சின்னக்குளம் மயான சங்கத்தினருக்கு புளொட் நிதியுதவி.

வவுனியா புதிய சின்னக்குளத்தில் மரண சடங்குகளை ஒழுங்கமைத்து மேற்கொள்ளும் சங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்க, கழகத்தின் மறைந்த உபதலைவர் தோழர் சூமாணிக்கதாசன், தோழர் இளங்கோ, தோழர் வினோ நினைவாக ஒரு தொகை உதவிப்பணம் கழகத்தின் போர்த்துகல்(கொலண்ட்) கிளையினரால் வழங்கப்பட்டது.

Read more

peravaiஇனப் பிரச்சினைக்கான தீர்வானது இந்த இனப் பிரச்சினையின் அடிப்படைக்காரணிகளை இணங்கண்டு நிரந்தரமாக தீர்ப்பதாக அமைய வேண்டும் என தமிழ் மக்கள் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் தமிழர் அரசியல் தீர்வு அடிப்படையிலான இலங்கையின் உத்தேச அரசியலமைப்பின் முயற்சி எனும் தொனிப்பொருளில் கலந்துரையாடலும் பிரகடன வெளியீடும் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

அந்த கலந்துரையாடலின் போதே தமிழ் மக்கள் பேரவையின் பிரகடனம் வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, Read more