வவுனியாவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு ஜூலை 19ம் திகதி செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த மொஹமட் துவான் என்பவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார். இதற்கமைய, செட்டிக்குளத்தைச் சேர்ந்த ரவீந்திர ஜோதி, நேசராசா மற்றும் குமார் ஆகிய மூவரே குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளது. இதேவேளை, வழக்குடன் தொடர்புடைய முதலாவது சந்தேகநபர் தவிர்த்து ஏனைய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கைதுசெய்வதற்கான பிடியாணையும், இதன்போது பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.