Header image alt text

pathirana GA vavuniyaவவனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன இன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இன்று காலை வவுனியா மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த புதிய அரசாங்க அதிபர் முன்னாள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக திணைக்கள அதிகாரிகள் ஆகியோரால் வரவேற்கப்பட்டார். வரவேற்பின் பின் தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு தேசியக்கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல் என்பன இடம்பெற்றன. Read more

sdfsdfsமன்னார் எருக்கலம்பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் தனது கணவரான முன்னாள் போராளி ஒருவர் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

மன்னார் எருக்கலம்பிட்டி 5ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதான இராசையா குகனேஸ்வரன் என்ற 4 பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளியே காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி நேற்று மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Read more

ramnath ranilஇந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியான தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுசெல்வது முக்கியமானது என இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிமசிங்க, புதுடில்லியில் உள்ள ராஷ்ரபதிபவனில் அந்நாட்டு ஜனாதிபதியை நேற்று சந்தித்தார். இதன்போதே இந்திய ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். Read more

faizer-1மக்கள் விடுதலை முன்னணியினால் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் சபாநாயகரிடம் குறித்த நம்பிக்கையிலாப் பிரேரணணை கையளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய அனைத்து மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளதாகவும், பிமல் ரத்நாயக்க வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக குறித்த பிரேரணையில் கையொப்பமிடவில்லையென தெரியவருகிறது.

hiruniaகொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில், இளைஞன் ஒருவரை கடத்தி, தாக்குதல் நடத்தி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அறுவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில், விசாரிக்கப்பட்ட மேற்படி வழக்கின் தீர்ப்பு, நீதிபதி ஆர். குணசிங்ஹவினால் இன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை தவிர அவருடைய மெய் பாதுகாவலர்களான எட்டு பேரில் ஆறு பேருக்கே, இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more

manus islandபப்புவா நியூகினியாவின் மானுஸ் தீவில் தங்கியிருந்த புகழிடக் கோரிக்கையாளர்களை வெளியேற்றியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மானுஸ் தீவில் தங்கியிருந்தவர்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்நாட்டு பொலிஸாரின் உதவியுடன் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. Read more