manus_island1மனுஸ் அகதிகள் முகாம் தொடர்பிலான முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இன்று வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அங்குள்ள அகதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி பென் லோமாய் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த முகாம் கடந்த வாரம் முதல் மூடப்பட்டநிலையில், அதற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அங்குள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 600 அகதிகள் வரையில் நிர்கதியாகியுள்ளனர். Read more