தோழர் சுந்தரத்தின் 36வது வருட நினைவுதினம்- புளொட் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகர்களுள் ஒருவரும், தளபதியும், புதியபாதை ஆசிரியருமான தோழர். ச. சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) யாழ் சுழிபுரத்தை பிறப்பிடமாய் கொண்ட அவர்; வீரமகனாய் மரணித்து 36வது (02.01.2017) ஆண்டு நினைவு நாள் இன்றாகும். புதிய பாதை அமைத்த தோழனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றோம். சிறந்த தலைமைப் பண்பும், துணிச்சலும், போராட்டத் தெளிவும் மிக்க பொதுவுடைமைவாதியான தோழர் சுந்தரம் அவர்கள் 02.01.1982 ல் யாழ் சித்திரா அச்சகத்தில் வைத்து புலிகளின் தவைர் பிரபாகரனால் ஒளிந்திருந்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்;. Read more