Header image alt text

உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு வருகைதந்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் அவரது பாரியாரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரவேற்றதுடன், இராணுவ மரியாதை வழங்கப்பட்டுள்ளது. Read more

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் 334 ஆவது நாள் நிறைவடைகின்றது.

வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு தை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை காணாமல்போனோரது உறவுகள் மேற்கொண்டனர். Read more

யாழ்ப்பாணம் மானிப்பாய் ஆணைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

பிரதான கோரிக்கைகள் நான்கினை முன்வைத்து நாளை மாலை 4 மணியின் பின்னர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத இயந்திர சாரதிகளின் சேவை காலத்தினை நீடிக்காமை, புதியவர்களை பணியில் இணைத்துக்கொள்ளாமை உள்ளிட்ட நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான பசுமை மாநகரம் எனும் தொனிப்பொருளில் யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

குறித்த நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் இணைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நல்லூர் இளங்களைஞர் மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இத் தேர்தல் விஞ்ஞாபனத்தினை வடமாகாண அவைத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் இணைத்தலைவருமான சீ.வி.கே.சிவஞானம் ஆதரவாளர்கள் மத்தியில் வாசித்து மக்களுக்கு வெளிப்படுத்தினார். Read more

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 12ம் வட்டாரத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு. இ.குமாரசாமி அவர்களின் தேர்தல் பரப்புரை கூட்டம் நேற்று(22-01-2018) யாழ். சுன்னாகம் மின்சாரநிலைய வீதியிலுள்ள கலைவாணி சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான கௌரவ த.சித்தார்த்தன், வடமாகாணசபையின் உறுப்பினர் திரு. பா.கஜதீபன் மற்றும் வேட்பாளர் இ.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு அப்பிரதேச மக்களுக்கு இத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியின் அவசியம் குறித்து விளக்கினர். Read more

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் அதிசயமான குடிசையொன்று மீட்கப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த குடிசையானது தாய்லாந்து நாட்டு மக்களால் உருவாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தாய்லாந்து மக்கள் தமது மூதாதையருக்கு பிதிர்க்கடன் செய்யும்போது தாம் வசிக்கும் வீட்டை ஒத்த வீடொன்றை உருவாக்கி கடலில் மிதக்கவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்து வருகின்றது. அவ்வாறானதொரு மூங்கில்களால் உருவாக்கப்பட்ட குடிசையொன்று இவ்வாறு கடலில் மிதந்து வந்துள்ளது. Read more

இலங்கையின் பிரபல பொப் இசை பாடகரான சிலோன் மனோகர் என்றழைக்கப்படும் ஏ.இ.மனோகரன் சென்னை திருவாண்மையூர் கந்தன்சாவடியில் நேற்றிரவு 7.20மணியளவில் காலமானார்.

ஏ.இ.மனோகரன் இலங்கையைச் சேர்ந்த புகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகரும் ஆவார். பல மொழிப் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்தவர். இவர் பொப் இசைச் சக்கரவர்த்தி எனப் பாராட்டுப் பெற்றவர். இவருக்கு இலங்கை மட்டுமன்றி தமிழகம் உள்ளிட்ட உலகில் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் இரசிகர்கள் உள்ளனர். Read more

இலங்கை விவசாயத்துறையின் அபிவிருத்திக்கு பல்வேறு புதிய நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக உதவி வழங்க எதிர்பார்த்துள்ளதாக, தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவர் சூலமனி சட்சுவான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read more