பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளையதினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை 9மணிக்கு ஏற்பாடு செய்துள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்கே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடல் குறித்து அறிவிப்பதற்கான கடிதங்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். Read more