Header image alt text

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பு, தமிழ் மக்கள் சார்ந்து முன்னெடுத்த சமூக மீள் எழுச்சித் திட்டங்கள் இன்று நேற்றல்ல, அமைப்பின் வரலாறு நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமான பின்பு, யுத்தத்தினால் சிதைவடைந்து காணப்பட்ட, இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்த தமிழ் மக்களின் தாயக பிரதேசங்களில், தமிழ் மக்களின் ஜனநாய உரிமைகளை பாதுகாக்கவும் இயல்பு வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளை கட்டியெழுப்பவும் புளொட் அமைப்பு தனது வெகுஜன முன்னணியாகிய ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஊடாக தீவிரமாக செயற்பட்டிருந்தது. 

வவுனியாவிலும், கிழக்கு மாகாணத்திலும் பல தோழர்களின் இன்னுயிரைப் பலியாக்கி மக்களுக்கு தற்காலிகமாக கிட்டைத்திருந்த சமாதானச் சூழலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தது. Read more

யாழ். விடத்தற்பளை கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் சாவகச்சேரி பிரதேச சபையின் 14ம் வட்டாரத்திற்கான வேட்பாளர்களான திரு. மயூரன், செல்வி. அருட்சோதி ஆகியோருடன் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் யாழ் மாநகர சபைக்கான வேட்பாளர் ஆசிரியர் தர்சானந்த் ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரையை மேற்கொண்டதுடன், சமகால அரசியல் நிலைமைகளையும் பொதுமக்களுக்கு விளக்கினார்கள். Read more

வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் 2ம் வட்டாரத்திற்கான தேர்தல் பரப்புரையும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான விளக்கவுரையும் நேற்று மயிலணி ஜனசக்தி சனசமூக முன்றலில் இடம்பெற்றது.

இதில் வேட்பாளர்களான திரு. சுதர்சன், திரு. லோகராஜன் ஆகியோருடன் புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள். Read more

பிரபல விமான சேவைகள் நிறுவனமான இண்டிகோ, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய விமான சேவைகளை நேற்று ஆரம்பித்துள்ளது.

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து இலங்கைக்கு நாளொன்றுக்கு மூன்று விமான சேவைகளை நடத்த இண்டிகோ திட்டமிட்டுள்ளது. இதன் முதல் விமானம் சென்னையில் இருந்து நேற்றுக் காலை 8.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையம் வந்து சேர்ந்தது. Read more

விசேட தேவையுடைய நபர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாதாயின், பிரதேச தெரிவத்தாட்சி அதிகாரியிடம் போக்குவரத்து வசதியை கோரி விண்ணப்பபடிவத்தை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொது போக்குவரத்து சேவை ஊடாக வாக்காளர் நிலையத்திற்கு செல்லமுடியாதாயின் அது தொடர்பில் குறித்த நபரால் அல்லது அவர் சார்பான வேட்பாளர் அல்லாத வேறு ஒரு நபரால் விண்ணப்பத்தை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. Read more

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரைக் காண, அவரது கணவர் நேற்றுப் பகல் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார். அங்கு, தன் பொலிஸ் மனைவியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். Read more

கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞரை இலக்குவைத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவ்விளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டம் நடத்தியோரை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்க்குண்டுப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read more