Header image alt text

2018 முதல் 2019ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான உதய ரொஹான்டி சில்வா மீண்டும் தெரிவாகியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற அந்த சங்கத்தின் தேர்தலின் போது எந்தவொரு போட்டியாளரும் முன்னிலையாகத காரணத்தினால் போட்டியின்றி முன்னாள் தலைவர் மீண்டும் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். Read more

சிறுவர் உரிமை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு, இலங்கையில் சிறார்களுக்கு நிலவும் மனித உரிமைகளின் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளது. ஜெனீவாவில் இந்த மாதம் 15ம் மற்றும் 16ம் திகதிகளில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது. மனித உரிமைகள் பேரவை இதனைத் தெரிவித்துள்ளது.

18 சுயாதீன நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்டதாக இந்த குழு உருவாக்கப்பட்டுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் அமுலாக்கியுள்ளன என்ற அடிப்படையில், இந்த ஆய்வு இடம்பெறும். Read more

மாலியில் சகஜ நிலையை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐ.நா.வின் பாதுகாப்புப் படையில் இணைந்துகொள்ளும் முகமாக, இலங்கை இராணுவ வீராங்கனைகள் 18 பேர் நேற்று மாலி நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே இதே பணியில் ஈடுபடும் முகமாக, கடந்த 24ஆம் திகதி இராணுவவீரர்கள் 150பேர் அடங்கிய குழுவொன்று அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மாலியில் உள்ள ஐ.நா. படையில் இணைந்து பணியாற்ற மொத்தம் 200 வீர, வீராங்கனைகளை அனுப்பிவைக்க இலங்கை முடிவுசெய்துள்ளது. Read more

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்கள் கடன் உதவியை இந்தியா வழங்கவுள்ளது.

இதற்கான உடன்படிக்கையில் இலங்கையும், இந்தியாவும் நேற்று கைச்சாத்திட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். Read more

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் ஏழாயிரம் கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரல் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின்போது அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுவரை தேர்தல் தொடர்பில் 243 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – மண்டூர் பொலிஸ் பிரிவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

மதுவரித் திணைக்களத்தில் கடமைபுரியும் ஒரு வயதுக் குழந்தையின் தந்தையான கிருஷ்ணப்பிள்ளை வாசன் (33) என்பவரே இவ் விபத்தில் பலியானார் என மண்டூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு இலுப்படிச்சேனையிலிருந்து மோட்டார் சைக்கிலில், அம்பாறைக்கு கடமைக்காக சென்றவேளையில் மண்டூர் வீதியில் வைத்து பஸ்வண்டியில் மோதுண்டதில் இவர் ஸ்தலத்திலே பலியானமை இங்கு குறிப்பிடத்தக்கது.