Header image alt text

(எம்.நியூட்டன்)

விடுதலைப் புலிகளின் காலத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் பலம் எவ்வாறு குறைந்ததோ அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் குறைந்தால் தமிழ் மக்களின் பலம் மீளவும் குறைந்து விடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.  அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை போன்று அதனை நிறைவேற்றினால் யாழ். மாநகரம் மிக அழகான பசுமை நிறைந்ததாகவும் இருக்கும். இவ்வாறு அதற்கேற்றவாறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசியற் தீர்வை பெற்றுக் கொள்கின்ற அதேநேரத்தில் அபிவிருத்தியையும் முன்னெடுக்க வேண்டும். அத்தோடு மக்களுடைய வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் வளப்படுத்திக் கொள்ளவேண்டும். Read more

வன்னி மக்கள் பாராளுமன்ற உறுப்பினரொருவரூடாக வரும் அபிவிருத்தியை இழந்துள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

வவுனியா திருநாவற்குளத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்து அங்கு பேசுகையில்,

வட்டாரங்கள் பிரிப்பதில்கூட முரண்பாடுகள் இருந்தன. இதற்குக் காரணம் எமது ஆதரவாளர்கள், முன்பிருந்ததை விட மிக ஆர்வமாக தாம் தேர்தலில் நிற்க வேண்டும் என வந்தார்கள். இதனால் எமது ஆதரவாளர்களுக்காக நாமும் எங்களுக்குள் பிரச்சினைகளை உருவாக்கினோம். கடைசி நேரத்தில் யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் உள்ள அலுவலகத்தில் ஆயிரக்கணக்கானோர் தாமும் தேர்தலில் நிற்க வேண்டுமென நின்றார்கள். அப்போதே எமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெல்லப் போகின்றது என்பதை அவர்கள் பறைசாற்றுகின்றார்கள் என்பதை உணர்ந்தோம். ஏனெனில் வெல்லக்கூடிய கட்சியில்தான் வேட்பாளர்கள் போட்டிபோட்டு வருவார்கள். Read more

வேதன முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரி சுங்க அதிகாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கொழும்பில் அமைந்துள்ள சுங்க தலைமையகத்திற்கு முன்னால் இன்று இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் லால் வீரகோண் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேறிய மக்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் காணி அற்றவர்களாக பதிவாகி இருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த 07 வருடங்களாக இவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார். மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் உடுவில் பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்ட 30 மாதிரிக் கிராம வீட்டுத்திட்டத்தை, மிகவும் பின்தங்கிய காணியற்ற நிலையிலுள்ள பயனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு யாழ் புன்னாலைக்கட்டுவான் கிழக்கு பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது. Read more

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார். இதேவேளை மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று மதியம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இந்த விஜயத்தின்போது இருதரப்பு சுதந்தர வர்த்தக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ரயில் சாரதிகளும் ரயில் பாதுகாப்பாளர்களும் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள ரயில்களை சேவையில் ஈடுபடுத்தாதிருக்க தீர்மானித்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பில் இன்று பகல் ரயில் பொது முகாமையாளர் உள்ளிட்ட போக்குவரத்து உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்காடு பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களான லட்சுமிகாந்தன், லோகராஜன், தர்சன் ஆகியோருக்கு ஆதரவுகோரி தேர்தல் பரப்புரை கூட்டமொன்று நேற்றையதினம் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் வேட்பாளர்களுடன் புளொட் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் தர்சானந்த் மற்றும் வலி தெற்கு பிரதேசசபைக்கான வேட்பாளர் அபராசுதன் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகள் வழங்கினார்கள். Read more

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று அவர் வருகை தருகின்றார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேசிய ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தங்களும் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. Read more

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதுடன் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கமலவதனா (கமலி) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்துள்ளார். கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்றுக்காலை தனது 6வயது மகனுடன் ரயிலிலிருந்து மற்றுமொரு ரயிலிற்கு மாறும்போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more