45 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அஞ்சலதிபர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அஞ்சலதிபர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். அவர் அனுராதபுரம் பகுதியில் கடமையாற்றி வந்த நிலையில், அங்கு வர்த்தகர் ஒருவரிடமிருந்து 45 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.